வருமான வரித் துறை 1.32 லட்சம் கோடி ரூபாய்  ரீபண்டு வருமான வரித் துறை 1.32 லட்சம் கோடி ரூபாய் ரீபண்டு ...  தொழில் துறை உற்பத்தி  வளர்ச்சி  0.2 சதவீதம் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 0.2 சதவீதம் ...
அன்னிய ஏற்றுமதி வர்த்தக கொள்கை தொழில் அமைப்புகளுக்கு அழைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2020
21:11

புதுடில்லி:அடுத்த அன்னிய ஏற்றுமதி வர்த்தக கொள்கையை உருவாக்குவது தொடர்பான ஆலோசனைகளை, தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகள் வழங்கலாம் என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


மத்திய அரசு, ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க, எம்.இ.ஐ.எஸ்., எனப்படும் வர்த்தக ஏற்றுமதி திட்டம், எஸ்.இ.ஐ.எஸ்., எனும் சேவைகள் ஏற்றுமதி திட்டம் போன்றவை அமலில் உள்ளன.

ஏற்றுமதிக்கு முன்னதாகவே அங்கீகாரம் பெறும் திட்டம், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள், ஏற்றுமதியை ஊக்குவிக்க நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான அன்னிய ஏற்றுமதி வர்த்தக கொள்கையை உருவாக்க, மத்திய வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்ட அறிக்கை:கடந்த, 2015 – 20ம் நிதியாண்டுக்கான, அன்னிய வர்த்தக கொள்கை, அடுத்த ஆண்டு, மார்ச், 31 வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது. இதையடுத்து, 2021 – 2026ம் நிதியாண்டுக்கான, அன்னிய வர்த்தக ஏற்றுமதி கொள்கை உருவாக்கப்பட உள்ளது. இது தொடர்பான ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை தொழில், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைப்புகள் தெரிவிக்கலாம்.


அதன் அடிப்படையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான அன்னிய வர்த்தக கொள்கை உருவாக்க படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, அனைத்து ஏற்றுமதி மேம்பாட்டு குழுக்கள், தொழில், வர்த்தக, விளைபொருள் வாரியங்கள், வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்புகளின் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான வழிகாட்டுதல்களை தொழில் துறையினருக்கு வழங்குமாறு, அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரக மண்டலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தேவை வளர்ச்சி


கடந்த, 2011 – 12ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 22 லட்சத்து, 50 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 2018 – 19ம் நிதியாண்டில், 24 லட்சத்து, 50 ஆயிரத்து, 825 கோடியாக உயர்ந்தது. எனினும், 2019 – 20ல், ஏற்றுமதி, 23 லட்சத்து, 57 ஆயிரத்து, 250 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)