பதிவு செய்த நாள்
14 நவ2020
07:32
புதுடில்லி:பண்டிகை காலத்தில் மக்களிடம் பணப் புழக்கத்தை அதிகரிக்க, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்த நடவடிக்கைகளால், தேவைப்பாடும், நுகர்வும் அதிகரித்துள்ளன. இதனால், இனி வர்த்தகம் நன்கு இருக்கும் என, பல நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.ஆய்வு டன் அண்டு பிராட்ஸ்ட்ரீட் நிறுவனம், பல துறைகளைச் சேர்ந்த, 350நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்கள் ஆகியோரிடம், வர்த்தக போக்கு எப்படி இருக்கும் என, ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுஉள்ளது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:தேவைப்பாடு அதிகரித்து வருவதால், நடப்பு, அக்., – டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டில், வர்த்தகம் சிறப்பாக இருக்கும் என, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கணிக்கப்பட்ட, ‘டி.பி.சி.பி.ஓ.ஐ.,’ எனப்படும் நிறுவன நம்பிகை குறியீடு, 57.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, ஜூலை – செப்., வரையிலான காலாண்டில், 46.2 சதவீதமாக இருந்தது. நடப்பு நான்காம் காலாண்டில்,53 சதவீதம் பேர், விற்பனை அதிகரிக்கும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது, மூன்றாவது காலாண்டில், 24 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில், நிகர லாபம் குறித்த நிறுவனங்களின் நம்பிக்கை, 27 சதவீதத்தில் இருந்து,40 சதவீதமாக உயர்ந்துள்ளது. 81 சதவீதம் பேர், விற்பனை விலையில் மாற்றம் இருக்காது என, ஆய்வில் கூறியுள்ளனர். 12 சதவீதம் பேர், விலை உயரும் எனவும், 7 சதவீதம் பேர் சரியும் எனவும் தெரிவித்துள்ளனர். இதே காலத்தில், ‘ஆர்டர்’ அதிகம் வரும் என, தெரிவித்தோர் எண்ணிக்கை, 22 சதவீதத்தில் இருந்து, 43 சதவீதமாக உயர்ந்துள்ளது. தளர்வுசரக்கு இருப்பு அதிகரிக்கும் என்று கூறியோர் எண்ணிக்கை, 11 சதவீதத்தில் இருந்து,24 சதவீதமாக அதிகரித்துள்ளது. 77 சதவீதம் பேர், ஊழியர்கள் எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது எனவும், 8 சதவீதம் பேர், குறையும் என்றும் கூறியுள்ளனர். அதேசமயம், சேவைகள் துறை நிறுவனங்களிடம், தொழில் துறையை விட நம்பிக்கை குறைவாக உள்ளது. விற்பனை, புதிய ‘ஆர்டர்’, லாபம், விலை, ஊழியர்கள் என, அனைத்து பிரிவிலும், இந்த தளர்வு காணப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|