எம்.இ.ஐ.எஸ்., திட்டம் மாறுகிறது புதிய ஏற்றுமதி சலுகை அமலாகிறது எம்.இ.ஐ.எஸ்., திட்டம் மாறுகிறது புதிய ஏற்றுமதி சலுகை அமலாகிறது ... இன்று பங்குச் சந்தையில் ‘சம்வாத்’ சிறப்பு வர்த்தகம் இன்று பங்குச் சந்தையில் ‘சம்வாத்’ சிறப்பு வர்த்தகம் ...
நுகர்வு, தேவை பெருகியுள்ளதால் நிறுவன நம்பிக்கை குறியீடு ‘விர்ர்...’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2020
07:32

புதுடில்லி:பண்டிகை காலத்தில் மக்களிடம் பணப் புழக்கத்தை அதிகரிக்க, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்த நடவடிக்கைகளால், தேவைப்பாடும், நுகர்வும் அதிகரித்துள்ளன. இதனால், இனி வர்த்தகம் நன்கு இருக்கும் என, பல நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.ஆய்வு டன் அண்டு பிராட்ஸ்ட்ரீட் நிறுவனம், பல துறைகளைச் சேர்ந்த, 350நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்கள் ஆகியோரிடம், வர்த்தக போக்கு எப்படி இருக்கும் என, ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுஉள்ளது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:தேவைப்பாடு அதிகரித்து வருவதால், நடப்பு, அக்., – டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டில், வர்த்தகம் சிறப்பாக இருக்கும் என, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கணிக்கப்பட்ட, ‘டி.பி.சி.பி.ஓ.ஐ.,’ எனப்படும் நிறுவன நம்பிகை குறியீடு, 57.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, ஜூலை – செப்., வரையிலான காலாண்டில், 46.2 சதவீதமாக இருந்தது. நடப்பு நான்காம் காலாண்டில்,53 சதவீதம் பேர், விற்பனை அதிகரிக்கும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது, மூன்றாவது காலாண்டில், 24 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில், நிகர லாபம் குறித்த நிறுவனங்களின் நம்பிக்கை, 27 சதவீதத்தில் இருந்து,40 சதவீதமாக உயர்ந்துள்ளது. 81 சதவீதம் பேர், விற்பனை விலையில் மாற்றம் இருக்காது என, ஆய்வில் கூறியுள்ளனர். 12 சதவீதம் பேர், விலை உயரும் எனவும், 7 சதவீதம் பேர் சரியும் எனவும் தெரிவித்துள்ளனர். இதே காலத்தில், ‘ஆர்டர்’ அதிகம் வரும் என, தெரிவித்தோர் எண்ணிக்கை, 22 சதவீதத்தில் இருந்து, 43 சதவீதமாக உயர்ந்துள்ளது. தளர்வுசரக்கு இருப்பு அதிகரிக்கும் என்று கூறியோர் எண்ணிக்கை, 11 சதவீதத்தில் இருந்து,24 சதவீதமாக அதிகரித்துள்ளது. 77 சதவீதம் பேர், ஊழியர்கள் எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது எனவும், 8 சதவீதம் பேர், குறையும் என்றும் கூறியுள்ளனர். அதேசமயம், சேவைகள் துறை நிறுவனங்களிடம், தொழில் துறையை விட நம்பிக்கை குறைவாக உள்ளது. விற்பனை, புதிய ‘ஆர்டர்’, லாபம், விலை, ஊழியர்கள் என, அனைத்து பிரிவிலும், இந்த தளர்வு காணப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)