‘இன்போசிஸ்’ சிபுலாலுக்கு 4 லட்சம் பங்குகள் பரிசு ‘இன்போசிஸ்’ சிபுலாலுக்கு 4 லட்சம் பங்குகள் பரிசு ...  தவணை வசதியை நாடும் பாலிசிதாரர்கள் தவணை வசதியை நாடும் பாலிசிதாரர்கள் ...
பொம்மை தயாரிப்பை ஒருங்கிணைக்கும் ‘ஸ்டார்ட் அப்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2020
14:28

பொம்மைகள் குழந்தைகளின் வாழ்வின் ஒரு அங்கம். ஒரு குழந்தையின் எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. பிரதமர் மோடி தனது சமீபத்திய, ‘மான் கி பாத்’ வானொலி பேச்சில் உள்ளூர் பொம்மைகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.தற்போதைய நிலவரப்படி, இந்திய பொம்மை தொழிலில் சீனா, 75 சதவீதம் ஆதிக்கம் செலுத்துகிறது.

இதனால், ‘ஸ்டார்ட்அப்’களை ஒன்றிணைத்து ஒட்டுமொத்த உலகிற்கும் பொம்மைகளை உள்நாட்டிலேயே தயாரிக்குமாறும், பிரதமர் கேட்டு கொண்டார்.உலக பொம்மை சந்தை, 6 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளது. இதில் இந்தியாவின் பங்கு வெறும், 0.5 சதவீதம் மட்டுமே.இந்திய பொம்மைகள் என்று எடுத்துக்கொண்டால், மரத்தாலான பொம்மைகளுக்கு நாம் காலங்காலமாக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். ஆந்திராவில் உள்ள, கொண்டபள்ளி என்ற ஊரில் பரம்பரையாக மரத்தினால் குழந்தைகளுக்கான பொம்மைகளை தயாரித்து வர்ணம் தீட்டுகிறார்கள்.இதுபோல வாரணாசியில் மரத்தினால் செய்யப்பட்ட பொம்மை, அஸ்ஸாமில், மூங்கிலால் செய்யப்படும் பொம்மை, மேற்கு வங்கத்தில் ‘டெரகோட்டா’, ராஜஸ்தானில், சுடப்படாத களிமண்ணால் செய்யப்படும் பொம்மை ஆகியன மிகவும் பிரபலம்.தமிழகத்தை பொறுத்தவரை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் உலக அளவில் புகழ் பெற்றவை. மரவள்ளி கிழங்கு மாவு, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

இது தவிர மரப்பாச்சி பொம்மைகளுக்கு மிகவும் புகழ் பெற்றது.கர்நாடகாவில் உள்ள சென்னபட்டணா என்ற ஊர், மரத்தாலான பொம்மைகளுக்கு உலகப்புகழ் பெற்றது. அழிந்து வந்த இந்த கலையை 1950ல், அம்மாநில அரசு புத்துயிர் கொடுக்க துவங்கி முயற்சி எடுத்தது. தற்போது கார்த்திக் வைத்தியநாதன் என்பவரின் முயற்சியால் சென்னப்பட்டணா கலைஞர்களை ஒன்றினைத்து அங்கு செய்யப்படும் உயிரோட்டமான பொம்மைகளை ஒரு, ‘ஸ்டார்ட் அப் கம்பெனி’ மூலம் விற்க துவங்கி உள்ளார்.இவை குழந்தைகள் விளையாடுவதை விட காட்சிப் பொருளாக வைக்கப்படுவதற்கு அதிகமாக வாங்கப்படுகின்றன. இவர்களின் இணையதளம்: www.varnamstore.in

– சேதுராமன் சாத்தப்பன் –

சந்தேகங்களுக்கு: இ–மெயில்: sethuraman.sathappan@gmail.com,

மொபைல் எண்: 98204–51259,
இணையதளம்:www.startupandbusinessnews.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)