பதிவு செய்த நாள்
15 நவ2020
22:34
மருத்துவ காப்பீடு பெறுபவர்கள் அதற்கான தொகையை மாத தவணை மூலம் செலுத்தும் வசதியை நாடுவது அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
மருத்துவ காப்பீடு பிரிமியம் தொகையை தவணை முறையில் செலுத்தும் வசதியை அளிக்க, காப்பீடு நிறுவனங்களுக்கு, 2019ம் ஆண்டில் காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. ஏற்கனவே இந்த வசதியை தேர்வு செய்திராதவர்களுக்கும், இந்த வசதியை விரிவாக்கம் செய்ய, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், மருத்துவ காப்பீடு பெறுபவர்களில் பலர் மாத தவணை வசதியை பயன்படுத்தி வருவதாக காப்பீடு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. புதிதாக மருத்துவ காப்பீடு பெறுபவர்களில், 40 சதவீதத்தினர் இந்த வசதியை நாடுவதாக தெரிய வந்துள்ளது.கொரோனா சூழலுக்கு மத்தியில் மருத்துவ காப்பீடு தேவை தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
எனினும், பணியிழப்பு, வருமானம் குறைவு போன்ற பாதிப்புகளும் இருப்பதால், பலரும் மாத தவணை வசதி மூலம் காப்பீடு பிரிமியம் தொகையை செலுத்தி வருவதாக தெரிய வந்து உள்ளது.தவணை முறை வசதியில், பிரிமியம் தொகை, 2 சதவீதம் வரை கூடுதலாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|