பதிவு செய்த நாள்
06 டிச2020
21:44
வங்கிக் கடன் பெறுபவர்களில் பெரும்பாலானோர் தங்கள், ‘கிரெடிட் ஸ்கோர்’ தகவலை அறிந்திருக்கவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கிரெடிட் ஸ்கோர் என்பது, கடன் தகுதியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவரின் பணத்தை திரும்பிச் செலுத்தும் ஆற்றல் உள்ளிட்ட அம்சங்களை கிரெடிட் ஸ்கோர் குறிக்கிறது. சிபில் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையை அளிக்கின்றன.
இந்நிலையில், கடன் பெறுபவர்களில், 68 சதவீதத்தினர் தங்கள் கிரெடிட் ஸ்கோர் தகவலை அறிந்திருக்கவில்லை என, ‘ஹோம் கிரெடிட் இந்தியா’ நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. கடன் பெறுபவர்களில், 52 சதவீதத்தினர் கிரெடிட் ஸ்கோரின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தாலும், பலரும் தங்கள் கிரெடிட் ஸ்கோர் எண்ணிக்கையை அறிந்து வைத்திருக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
நிதி கல்வி நிலை தொடர்பாக அறிந்து கொள்வதற்காக, ஏழு நகரங்களில் உள்ள, 1,000 பேர் மத்தியில் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பு, கடன் பெற்றவர்களில், 76 சதவீதத்தினர் அதற்கான வட்டியின் அளவை பற்றி அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கிறது.
கடன்தாரர்கள், கடனுக்கான மாதத் தவணையை மட்டுமே அறிவதில் ஆர்வம் காட்டுவதாகவும், அதில் வட்டியின் அளவு பற்றி அக்கறை கொள்ளவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|