விபத்தை தவிர்க்கும் 'மூன்று முடிச்சுகள்' :முன்னாள் கூடுதல் இயக்குனர் 'டிப்ஸ்'விபத்தை தவிர்க்கும் 'மூன்று முடிச்சுகள்' :முன்னாள் கூடுதல் இயக்குனர் ... ... விண்­வெளி துறை­யில் தனி­யார் விண்­வெளி துறை­யில் தனி­யார் ...
மூலப்பொருட்கள் விலைபணியாளர் பற்றாக்குறை: மீளும் முயற்சியில் 'கிரில் தொழில்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2020
16:13

கொரோனா காலகட்டத்தில் பாதிப்புகளை சந்தித்த தொழில் துறைகளில், 'கிரில் பேப்ரிகேட்டர்ஸ்' எனும் கிரில் தயாரிப்பும் ஒன்று. கோவை மாவட்டத்தில், 4,500க்கும் மேற்பட்ட கிரில் தயாரிப்பு தொழிற்கூடங்களும், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர்.இத்தொழிலில் தமிழக தொழிலாளர்கள் மிகவும் குறைவு என்ற நிலையில், பெரும்பாலும் வட மாநில தொழிலாளர்களை நம்பியே கிரில் தயாரிப்பு பணி நகர்ந்து கொண்டிருக்கிறது.

கிரில் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த உ.பி., பீகார் மாநில தொழிலாளர்கள், கொரோனா ஊரடங்கு சமயத்தில் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.தற்போது, பணிக்கு திரும்பாத அவர்களால், தொழில் பாதிப்பை சந்தித்து வருவதாக புலம்பும் கிரில் தொழில்முனைவோர், தொழில் துறை படிப்படியாக மீண்டுவரும் இச்சமயத்தில், போதிய 'ஆர்டர்' இருந்தும் உரிய நேரத்தில் வேலையை முடிக்கவில்லை என குமுறுகின்றனர்.

இதுகுறித்து, கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ரவி கூறியதாவது: சொந்த ஊர் திரும்பிய வடமாநில தொழிலாளர்களில் பெரும்பாலானோர், இன்னும் கோவை திரும்பவில்லை. அவர்கள் மீண்டும் பணிக்குவர, 50 சதவீதத்துக்கும் மேல் ஊதிய உயர்வு கேட்கின்றனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் மூலப்பொருட்கள் விலையும் அதிகரித்து வருகிறது.

தீர்வு அவசியம்
இரும்பு உற்பத்தியாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும், ஆங்கிள், பட்டாவுக்கு ஒரு டன்னுக்கு, 3,000 ரூபாய்க்கு அதிகமாகவும், பாலிஷ் ராடு, பைப், இரும்பு தகடுகளுக்கு டன்னுக்கு, 7,000 ரூபாய்க்கு அதிகமாகவும் விலையேற்றம் செய்துவிட்டனர்.இதனால், இந்த தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் தொழிலாளர் பற்றாக்குறையும், மறுபுறம் மூலப்பொருட்கள் விலையேற்றமும் கிரில் தொழில் வளர்ச்சியை பாதித்து வருகிறது. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும்.அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) பயிலும் மாணவர்களை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்கூடங்களிலும் ஊதியத்துடன் பயிற்சி அளிக்க, அரசு ஆவண செய்ய வேண்டும். விலையேற்றத்துக்கு காரணமான காரணிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

பரிசீலிக்க வேண்டும்
மேலும், எங்களுக்கு வாடிக்கையாளர்களாக, 5 சதவீதம் கட்டடப்பொறியாளர்களும், 95 சதவீதம் சிறிய அளவிலான பட்ஜெட் வீடுகள் கட்டும் உரிமையாளர்களும் உள்ளனர். இவர்களிடம் இருந்து, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., பெறமுடியவில்லை. எனவே, பழைய 'வாட்' வரியான, 5 சதவீதத்தை, ஜி.எஸ்.டி.,யாக வசூலிக்க, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சி பெறாத ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும், வாழ்வதாரத்திற்கு ஏற்ப ஊதியமும் வழங்கி அரசுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)