2020 கற்றுத் தந்துள்ள முக்கிய பாடங்கள் 2020 கற்றுத் தந்துள்ள முக்கிய பாடங்கள் ... இலக்கு நிறைவுபெறாத ‛நீட்ஸ் ’ திட்டம்: தொழில் முனைவோர்களுக்கு அழைப்பு இலக்கு நிறைவுபெறாத ‛நீட்ஸ் ’ திட்டம்: தொழில் முனைவோர்களுக்கு அழைப்பு ...
போலி ரசீது முறைகேடுகளுக்கு 'செக்' 'இ - இன்வாய்சிங்' முறை அமல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2020
10:57

மத்திய அரசானது, சரக்கு மற்றும் சேவை வரியை, 2017 ஜூலை முதல் அறிமுகம் செய்தது. கோவை மண்டலத்தில், 42 ஆயிரம் ஜி.எஸ்.டி., பதிவுகள் உள்ளன. 'ஒரு நாடு; ஒரு ஜி.எஸ்.டி.,' என்பதை மையமாக கொண்டு, பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

வரி தாக்கல், ஜி.எஸ்.டி., பதிவு உள்ளிட்டவற்றில் இருக்கும் சிரமங்களுக்கும், வரி செலுத்துவோரின் கருத்துகளை கேட்டு, ஜி.எஸ்.டி., கவுன்சில் தீர்வு கண்டு வருகிறது. அதேசமயம், வரி செலுத்தாததும், வரி ஏய்ப்பு முறைகேடுகளும் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றன.கோடிகள் மதிப்புடைய பொருட்களை அனுப்பியது போல் போலி ரசீது தயாரித்து வரி ஏய்ப்பு செய்வதாக நாடு முழுவதும் புகார்கள் அதிகரித்து வருகின்றன. ஜி.எஸ்.டி., துறையினரும் அடிக்கடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இது நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விடும் என்பதால், இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. எனவே, போலி ரசீது வாயிலாக முறைகேடுகளை தடுக்க 'இ - இன்வாய்சிங்' நடைமுறையை ஜி.எஸ்.டி., கொண்டு வந்துள்ளது.அதன்படி, 'சென்ட்ரல் சர்வர்' வாயிலாக தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு உறுதிபடுத்தப்படுவதுடன், ஜி.எஸ்.டி., அதிகாரிகளாலும் தொடர்ந்து கண்காணித்தும் நடவடிக்கை எடுக்க முடியும்.

இதுகுறித்து, ஆடிட்டர் வெங்கட்ரமணன் கூறுகையில், ''ஆண்டு விற்பனை, 100 கோடிக்கு மேல் இருப்பவர்களுக்கு அடுத்தாண்டு ஜன., 1ம் தேதி முதல் 'இ - இன்வாய்சிங்' கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., வலைதளத்தில் பதிவு செய்து இதை பெற வேண்டும்; இதனால், போலி ரசீது வாயிலாக நடக்கும் முறைகேடுகள் தடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)