பதிவு செய்த நாள்
16 டிச2020
21:11
சென்னை:கொரோனாவுக்குப் பின், ஸ்மார்ட் போன்களில் தினசரி செலவழிக்கும் சராசரி நேரத்தின் அளவு, 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக, விவோ இந்தியா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விவோ இந்தியா நிறுவனமும், சி.எம்.ஆர்., நிறுவனமும் இணைந்து, ‘ஸ்மார்ட் போன்கள் மற்றும் மனித உறவுகளில் அவற்றின் தாக்கம் 2020’ என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது.எட்டு முக்கிய நகரங்களில், 15 முதல், 45 வயதுக்குட்பட்ட நபர்களிடம், இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 66 சதவீதம் பயனர்கள், ஸ்மார்ட் போன் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக நம்புகின்றனர்.
இருந்தாலும், 70 சதவீதம் நபர்கள், ஸ்மார்ட் போன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தால், அது அவர்களின் மனநிலை, உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என, நினைக்கின்றனர்.மேலும், 84 சதவீத பயனாளர்கள், துாங்கி எழுந்த 15 நிமிடங்களுக்குள், தங்கள் தொலைபேசியை சரிபார்க்கிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|