பதிவு செய்த நாள்
22 டிச2020
09:21
புதுடில்லி: உள்நாட்டு நிறுவனமான, பி.பி.பி.எல்., எனும், ‘பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க்’ அனைத்து முக்கியவங்கிகளை விடவும், யு.பி.ஐ., பணப் பரிவர்த்தனைகளில், அதிக வெற்றி விகிதத்தை கொண்ட வங்கியாக, மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகளின் கூட்டமைப்பு ஆகியவற்றால் துவக்கப்பட்ட, தேசிய பணம் செலுத்தும் நிறுவனமான, என்.பி.சி.ஐ., இதை அறிவித்துள்ளது.சமீபத்திய என்.பி.சி.ஐ., அறிக்கையின்படி, பி.பி.பி.எல்., பிற முக்கியமான வங்கிகள் அனைத்தையும் விட, மிகக் குறைந்த தொழில்நுட்ப சரிவு விகிதம் கொண்டதாக இருக்கிறது.மற்ற வங்கிகளின், யு.பி.ஐ., பணப்பரிமாற்றம், மூன்றாம் நபர் செயலி மூலமாக செய்யப்படுகின்றன. ஆனால், பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் மட்டுமே, அதற்கானசொந்த செயலியைக் கொண்டிருக்கிறது.
பி.பி.பி.எல்., நிறுவனம், அதன் தளத்தில், ஏற்கனவே, 10 கோடி, யு.பி.ஐ., பணப் பரிவர்த்தனைகளை கையாண்டுள்ளது. இது, மேலும் அதிகரித்து வருகிறது.இது குறித்து, பி.பி.பி.எல்., நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சதீஷ் குப்தா கூறியதாவது:என்.பி.சி.ஐ., நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை, எங்களது செயல்திறனுக்கும், கடின உழைப்புக்கும், சிறந்த தொழில்நுட்பத்துக்குமான ஓர் சான்றாகும்.எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க, செயற்கை நுண்ணறிவு மற்றும் ‘பிக் டேட்டா’ தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில், மற்றவர்களை விட மிகவும் முன்னேறி இருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|