பதிவு செய்த நாள்
24 டிச2020
21:48
புதுடில்லி:சீனாவின் மிகப்பெரிய வணிகக் குழுமமான, ‘அலிபாபா’ நிறுவனத்தின், ஏகபோக நடத்தை குறித்த விசாரனையை, அந்நாட்டின் சந்தை கட்டுப்பாட்டு அமைப்புகள் துவக்கி உள்ளன.
சீனாவில் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் சிலவற்றின் அண்மைக்கால அதீத வளர்ச்சி, கட்டுப்பாட்டு அமைப்புகளின் கண்ணைத் திறந்துள்ளது. குறிப்பாக, அலிபாபா மற்றும் அதன் துணை நிறுவனமான, ‘ஆன்ட்’ ஆகிய நிறுவனங்களின் வளர்ச்சி சந்தேகத்துக்கு இடமாகி இருக்கிறது.
நடவடிக்கை
இது, அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜேக் மாவின் மின்னணு வர்த்தகம் மற்றும் நிதி தொழில்நுட்ப சாம்ராஜ்யத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.அலிபாபாவின் முக்கிய கொள்கைகளில் ஒன்று, ‘இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுங்கள்’ என்பது தான். அதாவது, அதனுடன் கூட்டு வைக்கும் நிறுவனங்கள், அலிபாபாவின் போட்டியாளர்களை விலக்கி வைக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.
இந்த கொள்கை முடிவு, ஏகபோக வர்த்தகத்துக்கு துணை புரிவதாக இருப்பதாக, சீன சந்தை கட்டுப்பாட்டு அமைப்புகள் தெரிவிக்கின்றன. இவை உறுதி செய்யப்பட்டால், எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து இனி தான் தெரிய வரும்.
நடந்தது என்ன?
அக்டோபர் 31: சீனாவின், ‘நிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழு’ கூட்டத்தில், நிதி தொழில்நுட்ப நிறுவனங்களின் அதீத வளர்ச்சி குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள், அலிபாபா தலைவர் ஜேக் மாவை சந்திப்பதாக தெரிவித்தனர்.
நவம்பர் 2: ஜேக் மா உடன் உயரதிகாரிகள் சந்திப்பு நடைபெற்றது. சீன கட்டுப்பாட்டு அமைப்புகள், இணையதள குறுங்கடன் நிறுவனங்கள் மீது கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவித்தன.
நவம்பர் 3: ஷாங்காய் சந்தையில், ‘ஆன்ட்’ நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஹாங்காங் சந்தை பங்கு வெளியீட்டை, ஆன்ட் நிறுவனம் நிறுத்தி வைத்தது.
நவம்பர் 10: இணையதளங்களின் ஏகபோக ஆதிக்கத்தை தடுக்கும்வகையிலான விதிகள் குறித்த வரைவு வெளியிடப்பட்டது.
டிசம்பர் 10: அலிபாபா மற்றும் ஆன்ட் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, விசாரணை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
டிசம்பர் 23: அலிபாபா குழுமத்தின் மீது, அதிகாரப்பூர்வ விசாரணை நடவடிக்கை துவங்கியதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|