பதிவு செய்த நாள்
25 டிச2020
21:32
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், உற்பத்தி துறையில் தேவை
அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
உருக்கு, உணவு பொருட்கள், சிமென்ட், வாகனம், மருந்து ஆகிய நிறுவனங்களில்,
இக்காலாண்டில் மீட்சி ஏற்பட்டுள்ளது.இதற்கு முந்தைய நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது, விற்பனை வளர்ச்சி சற்று சரிவைக் கண்டு, 4.3 சதவீதமாக உள்ளது.உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்கள் விற்பனை, இரண்டாவது காலாண்டில்,
5.9 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில், 3.97 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியில் எந்த மாற்றமும் இல்லாமல் நிலையாக இருக்கிறது. ஆனால், தகவல் தொழில்நுட்ப துறையை சாராத நிறுவனங்கள் சற்று சரிவை கண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|