பதிவு செய்த நாள்
03 ஜன2021
21:49
ரிசர்வ் வங்கியின் மாறும் வட்டி விகிதத்திலான சேமிப்பு பத்திரங்கள், 7.15 சதவீத வட்டி பலனை தொடர்ந்து அளிக்கும் என்பது, ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
பி.பி.எப்., உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை, காலாண்டிற்கான சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் மாற்றம் இல்லாமல் தொடரும் என, அண்மையில் அறிவிக்கப் பட்டது.தற்போதைய வட்டி விகிதம் தொடரும் என்பது, சிறுசேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்கு ஆசுவாசம் அளிப்பதாக அமைந்துள்ளது.
அதே நேரத்தில், ரிசர்வ் வங்கியின் மாறும் வட்டி விகிதத்திலான சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்பவர்களுக்கும் இது நல்ல செய்தியாக அமைகிறது.ரிசர்வ் வங்கி சேமிப்பு பத்திரங்களுக்கான வட்டி விகிதம், சிறுசேமிப்பு திட்டங்களில் ஒன்றான தேசிய சேமிப்பு சான்றிதழ் அளிக்கும் வட்டி விகிதத்தை விட, 35 அடிப்படை புள்ளிகள் கூடுதலாக இருக்கும்.
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்பதால், ரிசர்வ் வங்கி சேமிப்பு பத்திரங்களும், அடுத்த காலாண்டு வரை, தற்போதைய, 7.15 சதவீத வட்டி பலனை தொடர்ந்து அளிக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|