பதிவு செய்த நாள்
05 ஜன2021
12:36
புதுடில்லி:'இண்டிகோ பெயின்ட்ஸ்' நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி' அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிறுவனம், இந்த பங்கு வெளியீட்டின் மூலம், ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி இந்நிறுவனம், கடந்த நவம்பரில், செபிக்கு விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து, தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு, தற்போது தமிழகத்தில், புதுக்கோட்டையில் இருக்கும் அதன் தொழிற்சாலையை விரிவுபடுத்தவும், கடன்களை திருப்பி செலுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இந்த நிறுவனத்துக்கு, ராஜஸ்தான், கேரளா, தமிழகம் ஆகிய மூன்று இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|