பதிவு செய்த நாள்
06 ஜன2021
20:14
சென்னை : தங்கம் விலை மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்து வரும் நிலையில் இன்று(ஜன., 6) சவரன் மீண்டும் 39 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.29 உயர்ந்து ரூ.4,885க்கும், சவரன் ரூ.232 உயர்ந்து ரூ.39,08க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.52,690க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 60 காசுகள் உயர்ந்து ரூ.75.10க்கு விற்பனையாகிறது.
மார்கழி மாதத்தில் திருமணம் தொடர்பான நிகழ்வுகள் எதுவும் இல்லாததால் தங்கம் விலை சற்று குறைந்து இருந்தது. அடுத்து பொங்கல் பண்டிகை வருவதாலும், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் இனி தொடர்ந்து இரு மாதங்களுக்கு இருக்கும் என்பதால் தங்கம் வாங்கும் தேவை உயரும். அதன் தொடக்கம் கடந்த சில நாட்களாகவே தெரிகிறது. அதன்காரணமாக தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகவே மெல்ல உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்று உச்சமாக மீண்டும் 39 ஆயிரத்தை கடந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|