பதிவு செய்த நாள்
07 ஜன2021
22:14
மும்பை:ரியல் எஸ்டேட் துறையின் மீட்சிக்காக, மஹாராஷ்டிரா அரசு, கட்டுமானம்
சம்பந்தமான கூடுதல் வரிகளை, 50 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது. இந்த வரி குறைப்பு சலுகை, டிசம்பர், 31ம் தேதி வரை வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
முழு முத்திரைத்தாள்
மேலும், இந்த சலுகை தற்போது நடைபெற்று வரும் திட்டங்களுக்கும், புதிய
திட்டங்களுக்கும் பொருந்தும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓராண்டு முழுக்க இந்த,
50 சதவீத வரி தள்ளுபடி சலுகையை பெறும் கட்டுமான நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் சார்பாக, முழு முத்திரைத்தாள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் சரிவைக் கண்ட ரியல் எஸ்டேட் துறைக்கு, புத்துயிர் ஊட்டுவதற்காக அமைக்கப்பட்ட, தீபக் பரேக் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரையின் படி, இந்த
சலுகைகள் வழங்கப்படுவதாக அரசுஅறிவித்துள்ளது.மும்பையில் கிட்டத்தட்ட, 22 விதமான கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு வருகின்றன.
கட்டணம்
குறிப்பாக படிக்கட்டுகள், லிப்ட், லாபி போன்றவற்றுக்கான வரிகள், பெங்களூரு, டில்லி
ஆகிய நகரங்களை விட, மும்பையில் அதிகமாக உள்ளதாக கமிட்டி தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த செப்டம்பரில் மஹாராஷ்டிரா அரசு, முத்திரைத்தாள் கட்டணத்தை, கடந்த டிசம்பர், 31ம் தேதி வரை, நான்கு மாதங்களுக்கு, 5 சதவீதத்திலிருந்து, 2 சதவீதமாக குறைத்து அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|