பதிவு செய்த நாள்
23 ஜன2021
21:42
புதுடில்லி:உலகின் நம்பர் ஒன் பணக்காரரான, எலான் மஸ்க்கின், ‘டெஸ்லா’ நிறுவனத்தை, புதிதாக வேலைக்கு சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் கிடுகிடுக்க வைத்திருக்கிறார்.
இருவார கால ஒப்பந்தத்தில் வேலைக்குச் சேர்ந்த, அலெக்ஸ் கட்டிலோவ் எனும் பொறியாளர், நிறுவனத்தின் பல ஆவணங்களை திருடி விட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, தற்போது வழக்கை எதிர்கொண்டுள்ளார்.
புகார்
இரண்டு வார பணிக்காலத்தில், கிட்டத்தட்ட, 6 ஆயிரம் ஆவணங்களை அலெக்ஸ் திருடியுள்ளதாக, டெஸ்லா குற்றம் சாட்டி உள்ளது. இவர் மீது வர்த்தக ரகசியங்களை திருடியதாக புகார் கொடுத்துள்ளது.இதனை விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி, அலெக்ஸிடமிருந்து அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றுமாறும், மீண்டும் பிப்ரவரி, 4ம் தேதி ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே பேட்டி ஒன்றில், டெஸ்லாவின் நடவடிக்கை குறித்து அதிர்ச்சி அடைந்து இருப்பதாக அலெக்ஸ் கூறிஉள்ளார். அவருக்கு, டெஸ்லா கோப்பு ஒன்றை மட்டும் அனுப்பியதாகவும், அதை பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம் என தன்னுடைய ‘டிராப்பாக்ஸ் கிளவுட்’ கணக்குக்கு மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
‘டிராப்பாக்ஸ்’அத்துடன், அலுவலகத்தில் தன்னிடம் யாரும், ‘டிராப்பாக்ஸ்’ தடைசெய்யப் பட்டு உள்ளதாக தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், டெஸ்லா நிறுவனமோ, இந்த தரவுகள் அனைத்தையும் போட்டி நிறுவனங்களுக்கு அலெக்ஸ் வழங்கியிருக்ககூடும் என்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|