வாகனக் காப்பீட்டில் மற்றொரு பகல்கொள்ளை?வாகனக் காப்பீட்டில் மற்றொரு பகல்கொள்ளை? ... வெளிநாடுகளுக்குஇரும்புத்தாது ஏற்றுமதி:  மூலப்பொருள் தட்டுப்பாடு அதிகரிக்கும் வாய்ப்பு வெளிநாடுகளுக்குஇரும்புத்தாது ஏற்றுமதி: மூலப்பொருள் தட்டுப்பாடு ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வி.பி.எப்., வசதியை பயன்படுத்திக்கொள்வது எப்படி ?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
21:57

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப்., மற்றும் பொது வருங்கால வைப்பு நிதியான பி.பி.எப்., ஆகிய திட்டங்கள் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், இதே பிரிவில் வரும், வி.பி.எப்., திட்டம் பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. பி.எப்., திட்டத்துடன் தொடர்பு கொண்ட இந்த வசதி, வரி சேமிப்பில் கைக்கொடுக்கும் என்பதோடு, ஓய்வு காலத்திற்கான திட்டமிடலும் உதவியாக இருக்கும். மாத சம்பளம் பெறுபவர்கள் இந்த வசதியை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.


தன்னார்வ திட்டம்:


பி.எப்., திட்டத்தின் கீழ், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மாதந்தோறும் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவு தொகையை நிறுவனமும் செலுத்துகிறது. இது தவிர, ஊழியர்கள் விரும்பினால், தாங்கள் செலுத்தும் தொகையை அதிகரிக்கலாம். இப்படி தன்னார்வமாக செலுத்தும் வசதியே வி.பி.எப்., ஆக அமைகிறது.


என்ன பலன்?


ஊழியர்களின் ஓய்வுகாலத்திற்கு பாதுகாப்பு அளிப்பதே பி.எப்., திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் கீழ் சேரும் தொகைக்கு கூட்டு வட்டி அடிப்படையில் கணக்கிடப்படுவதால் நீண்ட கால நோக்கில் பலன் அளிக்க கூடியது. மேலும், பி.எப்., பங்களிப்புக்கு வரிச்சலுகை உண்டு. முதிர்வு தொகைக்கும் வரி கிடையாது.


கூடுதல் பலன்:


உறுப்பினர்கள் விரும்பினால், வி.பி.எப்., மூலம் தாங்கள் செலுத்தும் தொகையை அதிகரித்துக் கொள்ளலாம், எனினும், இதற்கு நிறுவன பங்களிப்பு பொருந்தாது என்றாலும், பி.எப்.,திட்ட வட்டி இதற்கும் பொருந்தும். எனவே, இதில் கூடுதலாக செலுத்தி வரிச்சலுகை பெறலாம் என்பதோடு, ஓய்வு கால தொகையும் அதிகரிக்கும்.


எப்படி துவக்குவது?


தற்போதைய நிலையில், வைப்பு நிதி உள்ளிட்ட கடன்சார் முதலீடுகளை விட, பி.எப்., வட்டி விகித பலன் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் வரிச்சலுகையும் அளிக்கிறது. எனவே, வி.பி.எப்., மூலமான பங்களிப்பு நல்ல பலன் அளிக்கும். நிறுவனம் மூலம் இதற்கான வசதியை கோரலாம்.


ஆன்லைன்:



நிறுவனங்கள், ‘ஆன்லைன்’ மூலமும் தன்னார்வ பங்களிப்பு செலுத்த வழி செய்கின்றன. தன்னார்வ வசதி என்பதால், இதற்கான தொகையை தேர்வு செய்து கொள்வதோடு, விரும்பிய போது, அதிகமாக்க அல்லது குறைக்கவும் செய்யலாம். பி.எப்., விலக்கலுக்கான விதிகள் இதற்கும் பொருந்தும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)