பதிவு செய்த நாள்
28 ஜன2021
00:23
வாஷிங்டன்:தொற்று நோய் சம்பந்தமான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது, உள்கட்டுமான முதலீடுகளை தொடர்வது உள்ளிட்ட அம்சங்கள், வரும் பட்ஜெட்டில் இடம்பெறுவதை ஆதரிப்பதாக, பன்னாட்டு நிதியத்தின், தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ‘ஆயுஷ்மான் பாரத்’ போன்ற சுகாதார திட்டங்களை விரிவுபடுத்துவது, வணிகரீதியில் லாபகரமான நிறுவனங்களின் பங்கு விலக்கல் ஆகியவை குறித்த அம்சங்களும், பட்ஜெட்டில் இடம்பெறும் என கருதுகிறோம்.
இந்திய அரசு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, அவற்றின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையிலான ஏராளமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
மத்திய நிதியமைச்சர், இந்த திட்டங்கள் எவ்வளவு சிறப்பாக இருந்தன என்பதை பார்த்து, இத்திட்டங்களுக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படின், அதை இந்த பட்ஜெட்டில் வழங்க வேண்டும்.வங்கிகளுக்கும், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும், தங்களுடைய மூலதனத்தை அதிகரித்துக் கொள்ள இது நல்ல நேரமாகும்.
இருப்பினும், பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான மூலதன ஆதரவை, அரசு வழங்க வேண்டிய தேவையும் இருக்கிறது.ஜி.எஸ்.டி., வசூலிலும் முன்னேற்றம் தேவைப்படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|