புதிய முதலீட்டாளர்கள் எண்ணிக்கை உயர்வு புதிய முதலீட்டாளர்கள் எண்ணிக்கை உயர்வு ...  புரூக்பீல்டு ஆர்.இ.ஐ.டி., நாளை புதிய பங்கு வெளியீடு புரூக்பீல்டு ஆர்.இ.ஐ.டி., நாளை புதிய பங்கு வெளியீடு ...
தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி: ஜனவரியிலும் தொடர்ந்து அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2021
04:19

புதுடில்லி : பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், ஜனவரி மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த ஜனவரி மாதத்தில், தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி அதிகரித்துள்ளது. புதிய ஆர்டர்கள், மொத்த விற்பனை ஆகியவை, இந்த அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.கடந்த ஜனவரி மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, ‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 57.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, டிசம்பரில், 56.4 புள்ளிகளாக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். ஜனவரியில் இக்குறியீடு,57.7 புள்ளிகளுக்கு உயர்ந்ததன் மூலம், வலுவான முன்னேற்றத்தை உணர்த்தியுள்ளது.

கொரோனா தாக்கத்துக்குப் பிறகு, தொடர்ந்து ஆறு மாதங்களாக, தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி கண்டு வருகிறது. இது வணிகங்கள் மேம்பட்டு வருவதை உணர்த்துவதாக உள்ளது. நிலையான விற்பனை வளர்ச்சி, உற்பத்தியை அதிகரிக்க மிகவும் உதவியாக இருந்துள்ளது. மேலும், ஆர்டர்கள் அதிகரித்து வருவதால், நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளில் இறங்குவதற்கான வாய்ப்புகளும் உருவாகி உள்ளன.தற்போது, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் அறிமுகம் ஆகியிருப்பதை அடுத்து, நிறுவனங்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இதையடுத்து, வரும் மாதங்களிலும் உற்பத்தி வளர்ச்சி அதிகரிப்பு தொடரும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)