பதிவு செய்த நாள்
02 பிப்2021
04:19
புதுடில்லி : பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், ஜனவரி மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த ஜனவரி மாதத்தில், தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி அதிகரித்துள்ளது. புதிய ஆர்டர்கள், மொத்த விற்பனை ஆகியவை, இந்த அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.கடந்த ஜனவரி மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, ‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 57.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, டிசம்பரில், 56.4 புள்ளிகளாக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். ஜனவரியில் இக்குறியீடு,57.7 புள்ளிகளுக்கு உயர்ந்ததன் மூலம், வலுவான முன்னேற்றத்தை உணர்த்தியுள்ளது.
கொரோனா தாக்கத்துக்குப் பிறகு, தொடர்ந்து ஆறு மாதங்களாக, தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி கண்டு வருகிறது. இது வணிகங்கள் மேம்பட்டு வருவதை உணர்த்துவதாக உள்ளது. நிலையான விற்பனை வளர்ச்சி, உற்பத்தியை அதிகரிக்க மிகவும் உதவியாக இருந்துள்ளது. மேலும், ஆர்டர்கள் அதிகரித்து வருவதால், நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளில் இறங்குவதற்கான வாய்ப்புகளும் உருவாகி உள்ளன.தற்போது, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் அறிமுகம் ஆகியிருப்பதை அடுத்து, நிறுவனங்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, வரும் மாதங்களிலும் உற்பத்தி வளர்ச்சி அதிகரிப்பு தொடரும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|