பதிவு செய்த நாள்
03 பிப்2021
21:33
புதுடில்லி:அமேசான் நிறுவனர், ஜெப் பெசோஸ், அந்நிறுவனத்தின் சி.இ.ஓ., எனும் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறார். இதனையடுத்து, இந்நிறுவனத்தின் இந்த பொறுப்புக்கு, ஆண்டி ஜாஸ்ஸி என்பவர் வருகிறார்.ஜெப் பெசோஸ், சி.இ.ஓ., பொறுப்பிலிருந்து விலகினாலும், நிர்வாக தலைவர் பொறுப்பை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செயல் அதிகாரி
ஆண்டி ஜாஸ்ஸி, அமேசான் மேகக் கணினி வணிகத்தின் தலைமை செயல் அதிகாரியாக தற்போது பணியாற்றி வருகிறார். இனி, அமேசான் குழுமத்தின் ஒட்டுமொத்த வணிகங்களின் தலைமை செயல் அதிகாரியாக செயலாற்றுவார்.
வாழ்த்து
அமேசான் கிட்டத்தட்ட, 124 லட்சம் கோடி ரூபாய், சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாகும். இதில், 13 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள்.அமேசான் துவங்கிய, 1995ம் ஆண்டிலிருந்து, நிறுவனத்தின் சி.இ.ஓ.,வாக, ஜெப் பெசோஸ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சிப் பாதையில் நிறுவனம் சென்றுகொண்டிருக்கும் நிலையில், ஏன் இத்தகைய முடிவை எடுத்துள்ளார் என்பது குறித்து, ஜெப் பெசோஸ் ஒரு நீண்ட கடிதத்தை எழுதி வெளியிட்டுள்ளார். அதில், புதிய முயற்சிகளில் இறங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். ஜெப் பெசோஸ் புதிய முயற்சிகளில் இறங்குவதை வரவேற்று, வாழ்த்து தெரிவித்துள்ளார், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|