பதிவு செய்த நாள்
05 பிப்2021
14:39
புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
இன்று (பிப்.,05) நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் வழக்கம்போல் ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும் தொடரும் என்று முடிவெடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது: வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக தொடரும். 4-வது முறையாக வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் ரிசர்வ் வங்கி எடுக்கும். 2021 - 2022-ல் பொருளாதார வளர்ச்சி 10.5% ஆக இருக்கும். மத்திய பட்ஜெட்டில், சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|