இந்தியாவுக்குள் சேவை  நிறுத்துகிறது ‘பேபால்’ இந்தியாவுக்குள் சேவை நிறுத்துகிறது ‘பேபால்’ ...  அதிகாரிகளுக்கு வாய்ப்பூட்டு ரிசர்வ் வங்கி நடவடிக்கை அதிகாரிகளுக்கு வாய்ப்பூட்டு ரிசர்வ் வங்கி நடவடிக்கை ...
வேகமாக வளர்ச்சி காணும் இந்திய இணைய பொருளாதாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2021
21:38

புதுடில்லி:இந்தியாவில் உணவு வினியோகம், மின்னணு வர்த்தகம், ஆன்லைன் காப்பீடுகள் போன்ற துறைகளில் செயல்பட்டு வரும், இணைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகளுக்கு வருவது குறித்து ஆர்வமாக இருக்கின்றன.

‘எச்.எஸ்.பி.சி., குளோபல்’

இத்தகைய நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, 2025ல், 180 பில்லியன் டாலராக இருக்கும் என, ‘எச்.எஸ்.பி.சி., குளோபல்’ ஆய்வு தெரிவித்துள்ளது. இது, இந்திய மதிப்பில், 13.14 லட்சம் கோடி ரூபாயாகும்.இது குறித்து, ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

இந்தியாவில், இணைய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 4.38 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, இந்த துறையில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், மூதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

‘யுனிகார்ன்’

கடந்த, 2020ம் ஆண்டில் மட்டும், 87 ஆயிரத்து, 600 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, 2025ல், நிதி தொழில்நுட்ப நிறுவனங்களை சேர்க்காமல், இந்த துறையின் மொத்த மதிப்பு, 13.14 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது, 42 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட, ‘யுனிகார்ன்’ நிறுவனங்களாக உள்ளன.

மேலும், ‘யுனிகார்ன்’ நிலைக்கு வருவதற்கு தகுதி படைத்தவையாக, 45 நிறுவனங்கள் உள்ளன.இந்நிலையில், பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தங்களை மேம்படுத்தவும்; புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தேவையான நிதியை, புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டும் திட்டத்தில் உள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)