பதிவு செய்த நாள்
06 பிப்2021
21:44
மும்பை:ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள், வங்கி நடவடிக்கைகள் குறித்த எந்த தகவலையும், நேரடியாகவோ; அல்லது, மறைமுகமாகவோ, ஊடகங்களுடன் பகிர்ந்துகொள்ள கூடாது என, ரிசர்வ் வங்கி, சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.
ரிசர்வ் வங்கியின் உயரதிகாரிகள், பிற மீட்டிங்குகளில் பங்கேற்பதும் தடை செய்யப்பட்டு இருப்பதாக, தெரிய வந்துள்ளது.ரிசர்வ் வங்கி, முதன் முறையாக இப்படி ஒரு அறிவிப்பை, சுற்றறிக்கை மூலம் வெளியிட்டிருப்பதாக, ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரிகள், பொதுவாக, பிராந்திய அளவில் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்கின்றனர். அவை முறையான அல்லது, முறைசாரா கூட்டங்களாக இருக்கின்றன.
இதுபோன்ற கூட்டங்களில், அதிகாரிகள் வெளிப்படுத்தும் கருத்துக்கள், ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ கருத்தாக, பொதுமக்களால் கருதப்படுகின்றன என, ரிசர்வ் வங்கி கவலை கொண்டுள்ளது.அண்மையில், ரிசர்வ் வங்கி, பழைய, 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, இந்த செய்தியை ரிசர்வ் வங்கி மறுத்து, அறிக்கை வெளியிட்டது.இந்த சம்பவம் காரணமாகவே, ரிசர்வ் வங்கி, இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|