பதிவு செய்த நாள்
16 பிப்2021
06:03
புதுடில்லி : ‘பார்தி ஏர்டெல்’ நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், டிஜிட்டல் வணிகத்துக்காக, தனியாக ஒரு நிறுவனத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொலைதொடர்பு துறையை சேர்ந்த, ‘பார்தி ஏர்டெல்’, தன்னை ஒரு தொழில்நுட்ப நிறுவனமாகவும் தொடர்ந்து நிலை நிறுத்தி வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக, தனியான வணிகப் பிரிவை துவக்க திட்டமிட்டுள்ளது.கடந்த, 2016ம் ஆண்டு, செப்டம்பரில், ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம் போட்டியாக களத்தில் இறங்கியதிலிருந்து, கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும், பார்தி ஏர்டெல் கடும் நெருக்கடிகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது.
சுனில் மிட்டல், தற்போது தன்னுடைய அனைத்து வணிக பிரிவுகளையும், ‘பார்தி ஏர்டெல்’ எனும் ஒரு குடைக்கு கீழே வைத்து செயல்படுத்தி வருகிறார்.இந்நிலையில், மொபைல் சேவை தவிர, இதர வணிகங்களும் தொலைதொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் அழுத்தத்தின் கீழ் வருவதை தவிர்க்கவே, இரண்டாக பிரித்துவிட, ‘பார்தி ஏர்டெல்’ முயற்சிக்கிறது என்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|