பதிவு செய்த நாள்
24 பிப்2021
21:13
புதுடில்லி:‘பார்தி ஏர்டெல்’ நிறுவனம், விளம்பர வணிகத்திலும் கால்பதிப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக, இந்நிறுவனம், ‘ஏர்டெல் விளம்பரங்கள்’ எனும் புதிய விளம்பர தொழில்நுட்ப வணிகத்தை, அறிமுகம் செய்தது.
மொபைல், டி.டி.எச்., ஆகியவற்றின் மூலம்,32 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு, ஒப்புதல் அடிப்படையிலான, தனியுரிமை பாதுகாப்புடன் கூடிய விளம்பரங்களை வழங்க இருப்பதாக, ஏர்டெல் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை தயாரிப்புகள் அதிகாரி ஆதர்ஷ் நாயர் கூறியதாவது: வாடிக்கையாளர்கள், தங்களுக்கு பொருத்தமான விளம்பரங்களையே பெறுவார்கள். தேவையற்ற விளம்பரங்கள் வராது. விளம்பரங்களில் விருப்பம் உடைய வர்களுக்கு மட்டுமே வழங்குகிறோம்.இதனால் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தரம் மிகவும் அதிகமாக இருக்கும்.
கிட்டத்தட்ட, 73 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய விளம்பர சந்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், இரு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.இதில், டிஜிட்டல் விளம்பர பிரிவு மட்டும், கடந்த ஆண்டில், 14 ஆயிரத்து, 600 கோடி ரூபாயாக இருந்தது, 2025ல், 58 ஆயிரத்து, 400 கோடி ரூபாயாக அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|