பதிவு செய்த நாள்
25 பிப்2021
21:20
புதுடில்லி:வாகனங்களுக்கான மின்னணு பாகங்கள், குறிப்பாக, செமிகண்டக்டர்களை, உள்நாட்டில் தயாரிப்பதற்கு, அரசு ஆதரவளிக்க வேண்டும் என, மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான, ‘சியாம்’ கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து, சியாம் தலைவர் கெனிச்சி அயுக்கவா மேலும் தெரிவித்துள்ளதாவது:மின்னணு பாகங்களை பொறுத்தவரை, குறிப்பாக, செமிகண்டக்டர்களை, உள்நாட்டில் தயாரிப்பதில் சில பிரச்னைகள் இருக்கின்றன. இவற்றை தயாரிப்பதற்கு பெரும் அளவில் முதலீடு தேவைப்படுகிறது. வாகனங்களுக்கான தேவைகள் மட்டுமே, எலக்ட்ரானிக் பாகங்கள் தயாரிக்க போதுமானது கிடையாது. அதிக முதலீடுகளும் தேவைப்படுகின்றன.
கொரோனாவின் போது அறிவிக்கப்பட்ட தடைகளின் காரணமாக, நுகர்வோர் மின்னணு தொழிலில் தேவைகள் அதிகரித்தன. இதையடுத்து, உலகளவில் செமிகண்டக்டருக்கான தேவையும் பல மடங்கு அதிகரித்து விட்டது. இதனால், வாகன உற்பத்தி, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் பாதிப்புக்கு உள்ளானது.தற்போதைய நவீன கார்களை தயாரிப்பதற்கு, செமிகண்டக்டர்கள் மிகவும் தேவை. எனவே, அரசு இத்தகைய மின்னணு பாகங்களை உள்நாட்டில் தயாரிப்பதற்கு ஆதரவளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|