பொருளாதார மீட்சி குறித்து தலைவர்கள் நம்பிக்கை பொருளாதார மீட்சி குறித்து தலைவர்கள் நம்பிக்கை ...  அதிகரித்து வரும் எரிபொருள் தேவை அதிகரித்து வரும் எரிபொருள் தேவை ...
நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சி ‘ரூட்’டை மாற்றி யோசிக்கும் மத்திய அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2021
20:30

புதுடில்லி:மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சியில், புதிய வழிமுறையை பின்பற்ற திட்டமிட்டுஉள்ளது.

இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, பங்கு விலக்கல் நடவடிக்கைகளில், மிகவும் தீவிரமாக இருக்கிறது. குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தில் உறுதியாக இருக்கிறது.ஆனால், இம்முயற்சிகள் எதுவும், தற்போது வரை பெரிதாக கைகொடுக்கவில்லை.

இதுவரை, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூடுவது, விற்றுவிடுவது, அல்லது, வேறு நிறுவனத்துடன் இணைப்பது என, முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.இதில் மூடுவது, இணைப்பது போன்றவற்றில், பெரிய அளவில் சிக்கல்கள் எதுவும் இல்லை. ஆனால், நஷ்டத்தில் இருக்கும் நிறுவன பங்குகளை விற்பதில், எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. ‘ஏர் இந்தியா’ உள்ளிட்ட பல நிறுவனங்களை, விற்கும் முயற்சிகள் எதுவும், இன்னும் கைகூடி வரவில்லை.இதனால், அரசு, வழிமுறையை மாற்ற முடிவு செய்திருக்கிறது.

இதன்படி, நஷ்டத்தில் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளை, முதலில் விற்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு, லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன பங்குகளை, விற்கும் முயற்சியில் இறங்க முடிவு செய்துஇருக்கிறது.இதையடுத்து, ‘நிடி ஆயோக்’ நிறுவனம், லாபத்தில் இயங்கும் நிறுவனங்களில், முதலில் எவற்றை தனியார்மயமாக்கலாம் என, ஒரு பட்டியலை தயாரித்து, ஏப்ரலில், அரசுக்கு வழங்க இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார். மத்திய அரசு, அடுத்த நிதியாண்டில், 1.75 லட்சம் கோடி ரூபாயை, பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் திரட்ட, இலக்கு வைத்திருக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)