பதிவு செய்த நாள்
06 மார்2021
20:30
புதுடில்லி:மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சியில், புதிய வழிமுறையை பின்பற்ற திட்டமிட்டுஉள்ளது.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, பங்கு விலக்கல் நடவடிக்கைகளில், மிகவும் தீவிரமாக இருக்கிறது. குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தில் உறுதியாக இருக்கிறது.ஆனால், இம்முயற்சிகள் எதுவும், தற்போது வரை பெரிதாக கைகொடுக்கவில்லை.
இதுவரை, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூடுவது, விற்றுவிடுவது, அல்லது, வேறு நிறுவனத்துடன் இணைப்பது என, முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.இதில் மூடுவது, இணைப்பது போன்றவற்றில், பெரிய அளவில் சிக்கல்கள் எதுவும் இல்லை. ஆனால், நஷ்டத்தில் இருக்கும் நிறுவன பங்குகளை விற்பதில், எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. ‘ஏர் இந்தியா’ உள்ளிட்ட பல நிறுவனங்களை, விற்கும் முயற்சிகள் எதுவும், இன்னும் கைகூடி வரவில்லை.இதனால், அரசு, வழிமுறையை மாற்ற முடிவு செய்திருக்கிறது.
இதன்படி, நஷ்டத்தில் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளை, முதலில் விற்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு, லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன பங்குகளை, விற்கும் முயற்சியில் இறங்க முடிவு செய்துஇருக்கிறது.இதையடுத்து, ‘நிடி ஆயோக்’ நிறுவனம், லாபத்தில் இயங்கும் நிறுவனங்களில், முதலில் எவற்றை தனியார்மயமாக்கலாம் என, ஒரு பட்டியலை தயாரித்து, ஏப்ரலில், அரசுக்கு வழங்க இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார். மத்திய அரசு, அடுத்த நிதியாண்டில், 1.75 லட்சம் கோடி ரூபாயை, பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் திரட்ட, இலக்கு வைத்திருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|