பதிவு செய்த நாள்
06 மார்2021
20:33
புதுடில்லி:ஒரு பக்கம், பெட்ரோல் விலை அதிகரித்து வந்தாலும், நாட்டின் எரிபொருள் தேவை, அடுத்த நிதியாண்டில், 10 சதவீத வளர்ச்சி காணும் என, பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கொரோனாவுக்கு பிறகு, பெட்ரோலிய பொருட்களின் தேவை, தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி வேகத்தை காட்டி வருகிறது.கொரோனா காலத்தில், இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த, முழுமையான ஊரடங்கு காரணமாக, எரிபொருள் தேவை, பாதிக்கும் கீழாக குறைந்துபோனது.
இதன் பின், ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டதும், பொருளாதார செயல்பாடுகள் அதிகரிக்க துவங்கின. அதன் தொடர்ச்சியாக, பெட்ரோலிய பொருட்களுக்கான தேவையும், அதிகரிக்க துவங்கி உள்ளது. அடுத்த நிதியாண்டில், 10 சதவீதம் அளவிலான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.தேவை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இன்னும், கொரோனாவுக்கு முந்தைய நிலை எட்டப்படவில்லை. அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி அதிகரிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|