பதிவு செய்த நாள்
12 மார்2021
23:07
புதுடில்லி:உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில், இணையதளம் ஒன்றை, மத்திய அரசு தயார் செய்து வருகிறது.
இது குறித்து, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துஉள்ளதாவது: நாட்டிலுள்ள முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில், அனைத்து விதமான தகவல்களை யும் வழங்கும் விதத்தில், இணையதளம் ஒன்றை, அரசு தயார் செய்து வருகிறது.இந்த இணையதளம், மே மாதம், 1ம் தேதி முதல், பயன்பாட்டுக்கு வரும் வகையில், தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், இந்த இணையதளம், அடுத்தகட்டமாக, பிராந்திய மொழிகளிலும் வழங்கப்பட உள்ளது. அத்துடன், மொபைல் செயலி வடிவிலும் வர உள்ளது.உள்நாட்டு முதலீடுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சி இது. இந்த இணையதளத்தில், மத்திய – மாநில அரசுகளின் முயற்சிகள், கொள்கைகள் குறித்த தகவல்கள் உடனுக்குடன் வெளியிடப்படும்.
மேலும் அனுமதிகள், உரிமங்கள், வரி விபரங்கள், அரசின் பல்வேறு திட்டங்கள், முயற்சிகள், தயாரிப்புத் துறை சார்ந்த தகவல்கள், ஆலை அமைப்பது சம்பந்தமான இட வசதிகள் என, அனைத்து விதமான தகவல்களும் இதில் வழங்கப்படும்.உள்நாட்டு முதலீட்டாளர்கள், தங்களுடைய முதலீடுகளை மேற்கொள்வதற்கு தேவைப்படும் அனைத்து விதமான தகவல்களும் வழங்கப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|