பதிவு செய்த நாள்
13 மார்2021
21:07
புதுடில்லி:‘நஸாரா டெக்னாலஜீஸ்’ நிறுவனம், 17ம் தேதிஅன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இதன் தொடர்ச்சியாக, ஒரு பங்கின் விலை 1,100 – 1,101 ரூபாய் என்றும் நிர்ணயித்து, அறிவித்துள்ளது.
இதன் பங்கு வெளியீடு, 17ம் தேதி துவங்கி, 19ம் தேதியன்று முடிவடைகிறது. துணிகர முதலீட்டாளர்களுக்கு, 16ம் தேதி துவங்குகிறது.நஸாரா டெக்னாலஜீஸ் நிறுவனம், ‘கேமிங்’ துறையில் ஈடுபட்டுள்ளது. இதனுடைய, ‘சோட்டா பீம், வேர்ல்டு கிரிக்கெட் சேம்பியன்ஷிப், மொட்டு பட்லு’ போன்ற விளையாட்டுகள் மிகவும் பிரபலமாகும்.
இந்த பங்கு வெளியீட்டின்போது, நிறுவனர்களின், 52.94 லட்சம் பங்குகள் விற்பனை செய்யப் பட உள்ளன. இதன் மூலம், 583 கோடி ரூபாய் நிதியை திரட்ட, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன. இந்நிறுவனம், இதற்கு முன், 2018ம் ஆண்டு பிப்ரவரியில் ஒரு முறை பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக விண்ணப்பித்து, ‘செபி’யின் அனுமதியையும் பெற்றது.
ஆனால், சந்தை சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால், அப்போது பங்கு வெளியீட்டுக்கு வரவில்லை. இப்போது, மீண்டும் முயற்சியை மேற்கொண்டு இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|