பதிவு செய்த நாள்
21 மார்2021
20:29
வீட்டில் இருந்து பணியாற்றுவது அதிகரித்து வரும் நிலையில், சைபர் பாதுகாப்பிற்கான காப்பீடு பெறுவது அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா சூழலில், பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பை ஊழியர்களுக்கு வழங்கின. இந்த போக்கு எதிர்காலத்திலும் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வீட்டில் இருந்து பணியாற்றுவது, ஊழியர்கள், நிறுவனங்கள் என இரு தரப்பினருக்கும் பல்வேறு அனுகூலங்கள் இருந்தாலும், பணிகளை இணையம் மூலமே மேற்கொள்வது, சைபர் தாக்குதல் மற்றும் கம்ப்யூட்டர் குற்றங்களுக்கும் இலக்காகும் அபாயம் உள்ளது.
எனவே, சைபர் தாக்குதல் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சைபர் காப்பீடு திட்டங்கள் அவசியம் ஆகின்றன. இத்தகைய சைபர் காப்பீடு திட்டங்களுக்கான தேவை அதிகரிக்கும் என, அண்மையில் நடைபெற்ற காப்பீடு தொடர்பான மெய்நிகர் நிகழ்ச்சியில், காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.
சைபர் காப்பீட்டிற்கான தேவை நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளிடம் இருந்து உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காப்பீடு நிறுவனங்களும் கொரோனா சூழலுக்கு பின், பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|