ஐ.பி.எல் உடன் அதிகாரப்பூர்வ கூட்டாளியாக இணைந்தது அப்ஸ்டாக்ஸ்ஐ.பி.எல் உடன் அதிகாரப்பூர்வ கூட்டாளியாக இணைந்தது அப்ஸ்டாக்ஸ் ...  வரியை ரொக்கமாக வழங்கணுமா வரி வாரியம் விளக்கம் வரியை ரொக்கமாக வழங்கணுமா வரி வாரியம் விளக்கம் ...
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ‘குஷாக்’ கார்: இந்தியாவில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2021
20:24

ஸ்கோடா நிறுவனம் குஷாக் என்னும் புதிய காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நடுத்தர எஸ்யூவி கார் பிரிவில் இந்த புதிய காரை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஸ்கோடா குஷாக் கார் இந்தியா 2.0 திட்டத்தில் தயாரிக்கப்பட்ட முதல் காராகும். இந்திய துணைக் கண்டத்தில் தனது செயல்பாடுகளை வலுப்படுத்தும் விதமாக வோக்ஸ்வாகன் குழுமத்தைச் சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது தயாரிப்புகளின் பிரச்சாரத்திற்காக ஒரு பில்லியன் யூரோவை முதலீடு செய்கிறது.

இந்த புதிய கார் இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் எம்க்யூபி-ஏ0-இன் என்னும் தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முன் பதிவு ஜூன் மாதம் துவங்க உள்ளது. முதல் குஷாக் கார் ஜூலை மாதம் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் மெட்டாலிக் ஹனி ஆரஞ்ச் மற்றும் டொர்னாடொ ரெட் ஆகிய வண்ணங்களில் வெளிவருகிறது.

புதிய குஷாக் காரின் வெளிப்புற தோற்றமானது இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எஸ்யூவி காரில் சிறந்த கிரவுண்ட் கிளியரன்ஸ், பெரிய சக்கரங்கள், உட்காருவதற்கான போதிய இட வசதி, எல்இடி தொழில்நுட்பத்திலான விளக்குகள்,ஸ்மார்ட்லிங்க் தொழில்நுட்பம், 6 ஏர்பேக்குகள், ஹில்-ஹோல்டு கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர், ஸ்கோடா கனெக்ட் மொபைல், பொருட்கள் வைக்க போதிய இட வசதி, டச் கண்ட்ரோல் பேனல், அதிநவீன இன்போடெய்மெண்ட் வசதி ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. குஷாக் காருக்கு மிகவும் சக்திவாய்ந்த 2 பெட்ரோல் என்ஜின்களைப் ஸ்கோடா நிறுவனம் பயன்படுத்துகிறது. மேம்படுத்தப்பட்ட டிஎஸ்ஐ என்ஜின்களின் சக்தி வெளிப்பாடானது 85 கிலோவாட் முதல் 110 கிலோவாட்டாக உள்ளது. இந்த என்ஜின்கள் சுற்றுப்புறத்திற்கு மாசு ஏற்படுத்தாத பிஎஸ்6 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த கார் 6 ஸ்பீட் மேனுவல் கியர் மற்றும் ஆட்டோ கியர் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

இது குறித்து ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாமஸ் ஷாபர் கூறுகையில், உலகத் தரத்திலான சிறந்த ஸ்கோடா குஷாக் கார் அறிமுகத்துடன் எங்களின் நவீன விளம்பர பிரச்சாரத்தை இந்திய சந்தையில் துவக்கி உள்ளோம். நாங்கள் எங்கள் புதிய மாடல் காரின் வெற்றிகரமான துவக்கத்தில் கவனம் செலுத்துகிறோம். இந்தியாவின் வளர்ச்சி திறனை நான் அதிக அளவில் நம்புகிறேன். இந்த வளர்ச்சியை நாங்கள் எங்கள் ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வாகன் நிறுவனங்களில் பயன்படுத்துவோம் என்று தெரிவித்தார். ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குர்பிரதாப் போபராய் பேசுகையில், ஸ்கோடா எஸ்யூவி குடும்பத்தின் சமீபத்திய வரவான இந்த கார் சிறந்த வடிவமைப்பு, நிகரற்ற செயல்திறன், சிறந்த தரம், சிறந்த பாதுகாப்பு உள்ளிட்ட ஏராளமான சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்தியா 2.0 திட்டத்தில் எம்க்யூபி-ஏ0-இன் என்னும் தளத்தில் வடிவமைக்கப்பட்ட முதல் கார் ஸ்கோடா குஷாக் கார் ஆகும். ஸ்கோடா குஷாக் கார் மூலம், நடுத்தர எஸ்யூவிகளுக்கான வளர்ந்து வரும் தேவையைத் பூர்த்தி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)