தனியார் வங்கிகளை விட  பொதுத்துறை வங்கிகள்  அதிகளவில் வட்டி குறைப்பு தனியார் வங்கிகளை விட பொதுத்துறை வங்கிகள் அதிகளவில் வட்டி குறைப்பு ...  ‘பிக்செட் டெபாசிட்’ எனும் குறித்த கால வைப்பு நிதிக்கு  அதிக பட்ச வட்டி தரும் சிறுநிதி தனியார் வங்கிகள் ‘பிக்செட் டெபாசிட்’ எனும் குறித்த கால வைப்பு நிதிக்கு அதிக பட்ச வட்டி ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2021
19:50

மும்பை:ரிசர்வ் வங்கி, குறுகிய கால கடன்களுக்கு விதிக்கும், ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில், 6 உறுப்பினர்களை கொண்ட, நிதிக் கொள்கை கூட்டம் கடந்த, 5ம் தேதியன்று துவங்கியது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கூட்டத்தின் முடிவுகள், இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.ரிசர்வ் வங்கியின், ‘ரெப்போ’ வட்டி விகிதம், 4 சதவீதம் என்பதில் எந்த மாற்றமும் தற்போது மேற்கொள்ளப்படவில்லை. அதனால், 4 சதவீத வட்டி என்பதே தொடரும்.

மேலும், ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதமும், 3.35 சதவீதமாகவே தொடரும்.நிதிக் கொள்கை கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

* ‘ரெப்போ’ வட்டி விகிதம் மாற்றப்படவில்லை. 4 சதவீதமாகவே தொடரும்

* நடப்பு நிதியாண்டில், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 10.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

* பணவீக்கத்தை பொறுத்தவரை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு பராமரிக்கப்படும்

* கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருவது, பொருளாதார மீட்சியில், நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா பரவலில் அதிக கவனம் செலுத்தப்படும்

* கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில், சில்லரை விலை பணவீக்கம், 5 சதவீதமாக இருக்கும் என மாற்றி கணிக்கப்பட்டுள்ளது

* பணவீக்க விகித இலக்கை, அடுத்த, 5 ஆண்டுகளுக்கு, 4 சதவீதமாக பராமரிக்கும்படி அரசு அறிவித்துள்ளது. இதில் 2 சதவீதம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

* உற்பத்தித் துறைகளுக்கு தேவையான கடன் கிடைப்பதற்காக, போதுமான பணப்புழக்கம் உறுதி செய்யப்படும்

* ‘பேமென்ட்’ வங்கிகளின் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, நாள் முடிவில், அதிகபட்ச இருப்பு வரம்பை, 1 லட்சம் ரூபாயிலிருந்து, 2 லட்சம் ரூபாய் என அதிகரிக்கப்படுகிறது

* வங்கிகளின் வாராக் கடன் சம்பந்தமான, சொத்து புனரமைப்பு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும்.

நீடித்த வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ளவும், நாட்டின் பொருளாதாரத்தில் கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்கவும் ஏதுவாக, வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்வதில்லை என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. அதேசமயம், பணவீக்கம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கிற்குள் இருப்பதும் உறுதி செய்யப்படும்.

சக்திகாந்த தாஸ்

கவர்னர், ரிசர்வ் வங்கி

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)