பதிவு செய்த நாள்
10 ஏப்2021
19:28
வாஷிங்டன்:இந்தியா, மிக வேகமாக வளர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, சர்வதேச நிதியத்தின் உதவி தலைமை பொருளாதார நிபுணர் பெட்டியா கோவா புரூக்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக, நாட்டின் பொருளாதாரம், மைனஸ், 8 சதவீதம் அளவுக்கு சரிந்து விட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில், 12.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மிக வேகமான வளர்ச்சியை எட்ட தேவையான முயற்சிகளை, இந்தியா எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார், புரூக்ஸ்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் பொருளாதார மீட்சி வலுவாக இருக்கிறது. தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு குறிகாட்டிகள், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில், வலுவான மீட்சியை உணர்த்துவதாக இருக்கின்றன. பட்ஜெட் உள்ளிட்டவற்றில், அரசு நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இருப்பினும், சமீபகாலமாக அதிகரித்து வரும் கொரோனாவால், ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதனால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப் படும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் மறுப்பதிற்கில்லை.பாதிப்பு ஏற்படக்கூடும் என, எதிர்பார்க்கும் நிலையிலும், வரும் ஆண்டுகளில் நிச்சயம் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு, இந்த பாதிப்புகளை சரிசெய்யும் எனக் கருதலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|