பதிவு செய்த நாள்
13 ஏப்2021
19:07
புதுடில்லி:கடந்த, 2020 – 21ம் நிதியாண்டில், நாட்டில் அதிகம் விற்பனையான முதல், 5 கார்கள், மாருதி சுசூகி நிறுவனத்தின் தயாரிப்புகள் தான் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் நிர்வாக இயக்குனர் சஷாங் ஸ்ரீவத்ஸவா கூறியதாவது:கடந்த, 2020ம் ஆண்டு, பொருளாதாரத்துக்கு புதியதொரு சவாலை கொண்டுவந்தது. ஆனாலும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மாறாமல் இருந்தது. அத்துடன், அவர்களை இணைப்பதற்கான புதுமையான வாய்ப்புகளையும் அந்த ஆண்டு கொடுத்தது. மாருதி சுசூகியின் பரந்த தயாரிப்புகள், சந்தையில் உள்ள, 90க்கும் மேற்பட்ட ஆட்டோமொபைல் பிராண்டுகளை விட, முன்னேற்றத்தை காண உதவியது.
நிறுவனத்தின் தயாரிப்புகளான, சுவிப்ட், பலேனோ, வேகன் ஆர், ஆல்ட்டோ, டிசையர் ஆகிய கார்கள், 2020 – 21ம் ஆண்டில் அதிகம் விற்பனை ஆகியுள்ளன. சுவிப்ட், 1.72 லட்சம் கார்கள் விற்பனையாகி முதல்இடத்தை பிடித்துள்ளது.இந்த மாடல்கள், மொத்த பயணியர் வாகன விற்பனையில், 30 சதவீதம் ஆகும். மேலும் இந்த, 5 கார்களும் தொடர்ந்து, நான்கு நிதியாண்டுகளாக முன்னணி இடத்தை தக்க வைத்து வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|