பதிவு செய்த நாள்
14 ஏப்2021
18:48
புதுடில்லி:குறுந்தொழில்கள், ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள், பெண் தொழில் முனைவோர் ஆகியோர் புதிதாக, இந்திய தர நிர்ணய கழகத்தின் உரிமம் மற்றும் சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டுக் கட்டணத்தை, 50 சதவீதம் குறைத்து, மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், இந்திய தர நிர்ணய கழகத்தின் சேவைகளை கட்டணமின்றி பெறலாம் என்றும்; அவற்றை அதன் இணையதளத்திலிருந்து அனைவரும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்திய தர நிர்ணய கழகம், ஓர் அரசு அமைப்பாகும். இது, தயாரிக்கப்படும் பொருட்களுக்கான தரத்தை நிர்ணயித்து, அதற்கான உரிமங்களையும் வழங்கி வருகிறது.
இது குறித்து, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல், டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:குறுந்தொழில்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், பெண் தொழில் முனைவோர் ஆகியோருக்கு உரிமம் மற்றும் சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டுக் கட்டணம், 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உரிமம் வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக, 10 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது. இது அரசாங்கத்தின், ‘உள்ளூர் தயாரிப்பு’ பிரசாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.ஏற்கனவே உரிமம் வைத்திருப்பவர்களுக்கு, 20 சதவீதம் தள்ளுபடி, ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. இப்போது கூடுதலாக மேலும், 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|