பதிவு செய்த நாள்
21 ஏப்2021
23:48
புதுடில்லி:கொரோனா தொற்று இரண்டாவது அலையையொட்டி, மீண்டும், ‘சானிடைசர்’ உள்ளிட்டவற்றின் தேவை அதிகரித்திருப்பதாக, நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.
இந்தியா முழுவதிலும் இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதை அடுத்து, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.குறிப்பாக, கைகழுவும் சோப்புகள், கிருமிநாசினிகள், கிருமியிலிருந்து பாதுகாக்க தேவையான தரையை சுத்தப்படுத்தும் பொருட்கள் போன்றவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது. கொசுவர்த்தி சுருள் தேவையும் அதிகரித்துள்ளது.
முதல் அலையின் போது தேவைகள் அதிகரித்து, கடுமையான தட்டுப்பாடு நிலவியது. இதற்கு, நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக அமைந்தது. ஊரடங்கு உத்தரவு களால், வினியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன. அதன் பிறகு நிலைமை சரியானது. கொரோனாவும் குறைய ஆரம்பிக்க வும், கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இத்தகைய பொருட்கள்நுகர்வில் சரிவு காணத் துவங்கியது.
இந்நிலையில், இப்போது இரண்டாவது அலை காரணமாக, மீண்டும் தேவை அதிகரித்து உள்ளது.இம்முறை வினியோகம் மற்றும் தயாரிப்பில் எந்த சிக்கல்களும் இல்லாமல், தேவைகளை நிறைவேற்ற முடியும் என ஐ.டி.சி., எச்.யு.எல்., ஹிமாலயா, பதஞ்சலி உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துஉள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|