பதிவு செய்த நாள்
21 ஏப்2021
23:53
புதுடில்லி:இதுவரை இல்லாத வகையில், இந்தியாவில், நடப்பு ஆண்டின், முதல் மூன்று மாதங்களில் மட்டுமே, மொத்தம், 22 புதிய பங்கு வெளியீடுகள் வந்துள்ளன. இந்த பங்கு வெளியீடுகளின் வாயிலாக, 18 ஆயிரத்து, 750 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆலோசனை நிறுவனமான, இ.ஒய்., அதன் அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நுகர்வோர் பொருட்கள், சில்லரை விற்பனை, வாகனம் போன்ற துறைகளை சேர்ந்த நிறுவனங்கள், அதிகளவில் பங்கு வெளியீட்டுக்கு வந்துள்ளன.
பங்குச் சந்தைகள் இக்காலகட்டத்தில் வளர்ச்சியை கண்டு வந்த காரணத்தினால், பல நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கான முயற்சிகளை மேற்கொண்டன.இதன் காரணமாக, இந்த காலாண்டில், உலகஅளவில் அதிக பங்கு வெளியீடுகளைக் கண்ட நாடாக இந்தியா உயர்ந்துள்ளது.
குறு, சிறு நிறுவனங்களையும் சேர்த்து மொத்தம் 22 நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வந்துள்ளன.இருப்பினும், கொரோனா வால், ஜூன் காலாண்டில் இந்த அளவுக்கு எதிர்பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|