பதிவு செய்த நாள்
23 ஏப்2021
20:40
புதுடில்லி:அண்மையில், சிட்டி குழுமம், இந்திய நுகர்வோர் வணிகத்திலிருந்து வெளியேற இருப்பதாக தெரிவித்தது.அதாவது, கிரெடிட் கார்டு, அடமான கடன் உள்ளிட்ட வணிகங்களிலிருந்து வெளியேற இருப்பதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது, ஆப்ரிக்காவை சேர்ந்த பர்ஸ்ட்ராண்டு, இந்தியாவில் தன்னுடைய கிளைகளை, ‘ரெப்ரசென்டேட்டிவ்’ அலுவலகமாக மாற்ற திட்டமிட்டிருக்கிறது. இருப்பினும் இந்திய செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ளும் முடிவு எதையும், தற்போது இந்நிறுவனம் எடுக்கவில்லை என, புளூபெர்க் அறிக்கை தெரிவிக்கிறது.
பர்ஸ்ட்ராண்டு பேங்க் இந்தியா நிறுவனம், நாட்டில் நிதிச் சேவைகளை வழங்கி வருகிறது. இருப்பினும், இந்தியாவில் இதன் செயல்பாடுகள் பெரிய அளவில் இல்லை.இந்தியாவில் வங்கி துறையை பொறுத்தவரை, சில்லரை வணிகத்தில், உள்நாட்டு வங்கிகளுடன் போட்டி போடமுடியவில்லை என்பதால், இத்தகைய முடிவுக்கு வெளிநாட்டு வங்கிகள் வருகின்றன என்கிறார்கள், இத்துறை நிபுணர்கள்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|