பதிவு செய்த நாள்
24 ஏப்2021
20:14
புதுடில்லி:கொரோனா காலத்தில், அத்தியாவசிய பொருட்களின் உள்நாட்டு வர்த்தகம், உற்பத்தி, வினியோகம், சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை கண்காணிக்க, ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது, மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை.
இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி, வினியோகம் உள்ளிட்ட பல விஷயங்களில் இடர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மின்னணு வர்த்தக நிறுவனங்களும், பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதாக புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து இவற்றுக்காக, ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் தயாரிப்பு, வர்த்தகம், வினியோகம், போக்குவரத்தில் ஏதேனும் இடர்கள் ஏற்பட்டால், இங்குள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். அதிகாரிகளை தொடர்பு கொள்ள, 011 – 2306 2383, 2306 2975 ஆகிய தொலைபேசி எண்களை பயன்படுத்தலாம் அல்லது dpiit-controlroom@gov.in. எனும் மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.
காலை, 8 முதல், இரவு, 10 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறையை, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். புகார்கள் குறித்து, மாநில அரசுகளுடன் தொடர்பு கொண்டு பிரச்னைகள் தீர்க்கப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|