பதிவு செய்த நாள்
07 மே2021
18:41
புதுடில்லி:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், அதன் பயணியர் வாகனங்களின் விலையை அதிகரிக்க இருப்பதாக, தெரிவித்துள்ளது. மேலும், இந்த விலை உயர்வு, இன்று முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பயணியர் வாகனங்களின் மாடலை பொறுத்து, இந்த விலை உயர்வு சராசரியாக, 1.8 சதவீதம் அளவுக்கு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.அத்துடன், 7ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக பதிவு செய்திருப்பவர்களுக்கு, இந்த புதிய விலை உயர்வு பொருந்தாது என்றும்; 8ம் தேதி முதல் வாங்குபவர்களுக்கே பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணியர் வாகன பிரிவு வணிகத்தின் தலைவர் ஷைலேஷ் சந்திரா கூறியதாவது:உருக்கு மற்றும் முக்கிய உலோக பொருட்களின் விலை அதிகரித்து உள்ளதை அடுத்து, அதன் பாதிப்பில் ஒரு பகுதியை சரிசெய்யும் வகையில், விலை உயர்வை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இருப்பினும், இந்த அறிவிப்புக்கு முன்னதாக பதிவு செய்திருக்கும் வாடிக்கையாளர்கள், பழைய விலையிலேயே வாங்கி கொள்ளலாம்.
8ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. விலை உயர்வு, மாடல்கள் மற்றும் வகையை பொறுத்து, சராசரியாக, 1.8 சதவீதம் அளவுக்கு இருக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 4.85 லட்சம் ரூபாயிலிருந்து, 21.4 லட்சம் ரூபாய் வரை விலை கொண்ட, பயணியர் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|