பதிவு செய்த நாள்
20 மே2021
19:55
பன்னாட்டு வணிக நிதி நிறுவனமான ட்ரிப் கேப்பிடல் சமீபத்தில் இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களை உள்ளடக்கிய தேயிலை வணிகத்தை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்வேறு வளரும் சந்தைகளின் போக்குகளைப் புரிந்து கொள்ளத், தனியுரிமையான மற்றும் பொதுவான தரவுகளின் ஆய்வு, நாட்டின் தேயிலை உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்ற நுண்ணோக்குகள், ஆகியவற்றின் அடிப்படையில், தேயிலைத் துறையின் விசையியக்கவியல் குறித்து ஆழமாக இந்த அறிக்கை விவரிக்கிறது.
2019-20ஆம் ஆண்டு அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து மூன்றாவதாகத் தமிழ்நாடு 150 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தேயிலையை ஏற்றுமதி செய்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2015-20 காலத்தில் தேயிலை ஏற்றுமதியில் இப்பிராந்தியம் 6% சிஏஜிஆர் வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்றும் ட்ரிப் கேப்பிடல் ஆய்வு தெரிவிக்கிறது.
உள்ளூர் தேயிலை பிராண்டுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், இலங்கையின் சந்தைத் திட்டங்களையும் பின்பற்ற வேண்டும். குறிப்பாகப் பெரிய அளவிலான பேக்கேஜிங்க் கட்டுதலுக்குப் பதிலாக, அதிகம் விரும்பப்படும், எளிதாக சரக்குகளை அனுப்ப வசதிப்படும், சிறிய அளவிலான பேக்கேஜிங்க் கட்டுதலுக்கு இந்தியா மாற வேண்டும். மேலும், ஏற்றுமதியாளர்கள் தனியார் லேபிள் சேவைகளை வழங்கத் தொடங்குவதன் மூலம், வாங்குவோரே பேக்கேஜிங்க் மீது பிராண்டிங்க் செய்வதால், மதிப்பத் தொடர் சந்தையில் பொருள் இன்னும் அதிகமாக விற்பனையாகும். ரெடி-டு-டிரிங்க் தேநீர், பிரபலமாக உள்ள க்ரீன் டீ ஆகிய சந்தைகளில் தடம் பதித்தல் உள்ளிட்ட வளரும் நுகர்வு முறைகளை அமல்படுத்துதல் இன்றைய காலத்தின் கட்டாயமாகும், என்று ட்ரிப் கேபிடல் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|