பதிவு செய்த நாள்
24 மே2021
23:58
சென்னை : ‘டபே’ நிறுவனம், தமிழகத்தில் உள்ள குறு, சிறு விவசாயிகளுக்காக, இலவச டிராக்டர் வாடகை திட்டத்தை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில், பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளுக்காக, டபே நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பின் மதிப்பு, 15 கோடி ரூபாய்.இந்த இலவச டிராக்டர் வாடகை திட்டத்தின் மூலம், தமிழகத்தில்உள்ள, 50 ஆயிரம் விவசாயிகளின், 1.20 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். இத்திட்டம், 2021 மே மாதம் முதல், 2021 ஜூலை வரை பயன்பாட்டில் இருக்கும். இந்த திட்டத்திற்காக, டபே நிறுவனம், 16 ஆயிரத்து 500 மேஸி பெர்குசன், ஐஷர் டிராக்டர்கள் மற்றும் 26 ஆயிரத்து 800 வேளாண் சாதனங்களை வழங்குகிறது.
தமிழகத்திலுள்ள, 2 ஏக்கர் அல்லது அதற்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறிய விவசாயிகளின் நலனுக்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, டபே நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான மல்லிகா சீனிவாசன் தெரிவித்து உள்ளார். தமிழக அரசின் உழவன் செயலி வழியாகவோ அல்லது கட்டணமில்லாத உதவி எண், 1800 -4200 -100 வழியாகவோ, விவசாயிகள் டிராக்டர்களை பெறலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|