பதிவு செய்த நாள்
25 மே2021
19:43
பெங்களூரு:கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட, 23 ஆயிரம் பேர்களை பணிக்கு அமர்த்தியிருப்பதாக, மின்னணு வர்த்தக நிறுவனமான, ‘பிளிப்கார்ட்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் வினியோக பிரிவின் மூத்த துணை தலைவர் ஹேமந்த் பத்ரி கூறியதாவது:கடந்த மூன்று மாதங்களில் அதாவது, மார்ச் முதல் மே வரையிலான கால கட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட, 23 ஆயிரம் பேர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். டெலிவரி துவங்கி பல்வேறு பணிகளுக்காக இவர்கள் எடுக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா காலத்தில், மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில், பொருட்களை வாங்குவதற்கு, ‘ஆன்லைன்’ தளத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனால், தேவை உயர்ந்து வருகிறது. இது, இத்துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரித்துள்ளது.இப்படி புதிதாக பணிக்கு அமர்த்தப்படுவோருக்கு, நிறுவனம் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.
இத்தகைய வகுப்புகள் மற்றும் டிஜிட்டல் பயிற்சிகள் அவர்களை மேம்படுத்துகிறது.இந்த பயிற்சிகள் ஆன்லைன் மற்றும் செயலிகள் வாயிலாக நடத்தப்படுகின்றன. இதற்காகவே நிறுவனம் சொந்தமாக பயிற்சி அமைப்பை வைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|