பதிவு செய்த நாள்
28 மே2021
22:22
மும்பை:அரசின் தங்க பத்திர வெளியீட்டின் வாயிலாக, கடந்த மார்ச் மாதம் வரையிலான காலத்தில், 25 ஆயிரத்து 702 கோடி ரூபாய் பெறப்பட்டிருப்பதாக, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015 நவம்பரில், தங்க பத்திர திட்டத்தை அறிவித்தது. கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி, தங்க பத்திரங்களை, 12 கட்டங்களாக வெளியிட்டது. இதன் மூலம், 16 ஆயிரத்து 49 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.இந்நிலையில், இத்திட்டம் துவங்கி, கடந்த மார்ச் மாதம் வரையிலான காலத்தில், மொத்தம், 63.32 டன் தங்கத்துக்கான பத்திரம் வெளியிடப்பட்டது; இதன் மதிப்பு, 25 ஆயிரத்து 702 கோடி ரூபாய் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான தங்க கடன் பத்திரங்கள், மே மாதம் துவங்கி, செப்டம்பர் மாதம் வரை மொத்தம், ஆறு கட்டங்களாக வெளியிடப்பட உள்ளதாக, மத்திய நிதிஅமைச்சகம் அண்மையில் தெரிவித்திருந்தது. இதில் முதல் கட்ட வெளியீடு, 17ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடைபெற்றது.இரண்டாம் கட்ட வெளியீடு, நேற்றுடன் முடிவுக்கு வந்தது. மூன்றாம் கட்ட வெளியீடு, 31ம் தேதி துவங்கி, ஜூன் 4ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
பத்திர வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தகதினங்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியை கொண்டு வெளியீடு விலை நிர்ணயிக்கப்படுகிறது. வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|