பதிவு செய்த நாள்
02 ஜூன்2021
21:51
மும்பை:ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான, பணக் கொள்கை குழு உறுப்பினர்கள் கூட்டம் துவங்கியது.
மூன்று நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தின் முடிவில், ரிசர்வ் வங்கி, அதன் வட்டி குறித்த முடிவுகளை அறிவிக்க உள்ளது.கொரோனா இரண்டாவது அலை தொடர்பான பணவீக்கம் குறித்த அச்சம் மற்றும் தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி அதன் வட்டி குறித்த முடிவில் எந்த மாற்றத்தையும் செய்யாமல், பழைய நிலையே தொடரும் என அறிவிக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கு முன், கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பணக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதம் குறித்து எந்த மாறுதலையும் அறிவிக்காமல், பழைய நிலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போதைய ரெப்போ வட்டி விகிதம், 4 சதவீதமாக உள்ளது. மேலும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம், 3.35 சதவீதமாக உள்ளது.பணவீக்கம் உயர்ந்துள்ள நிலையால், பெட்ரோலிய பொருட்கள் விலை மற்றும் உள்ளீட்டு விலை ஆகியவை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், வட்டியில் பெரிய மாற்றம் எதுவும் இம்முறை இருக்காது என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும், தடுப்பூசி போடுவது விரைவுபடுத்தப்படும் வரை, பெரிய மாற்றங்களுக்கு ரிசர்வ் வங்கி முயற்சிக்காது என்கின்றனர்.ரிசர்வ் வங்கி, வட்டி குறித்த தன் முடிவை நாளை அறிவிக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|