பதிவு செய்த நாள்
05 ஜூன்2021
19:38
மும்பை:வங்கிகளால் வழங்கப்படும், ‘வைப்பு சான்றிதழ்’ குறைந்தபட்சம், 5 லட்சம் ரூபாயிலிருந்து துவங்கி, அதன் மடங்குகளில் வழங்கப்படும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சி.டி., என அழைக்கப்படும் வைப்பு சான்றிதழ், ஓராண்டு வரையிலான முதிர்வு காலத்துக்கு, டிபாசிட் செய்யப்படும் நிதிகளுக்கு எதிராக, வங்கியால் வழங்கப்படும் சான்றிதழாகும். இது ஒரு பாதுகாப்பற்ற பணச் சந்தை திட்டமாகும்.இந்த வைப்பு சான்றிதழானது, ‘டிஜிட்டல்’ வடிவில் மட்டுமே வழங்கப்படும் என்றும்; இது, ‘செபி’யில் பதிவு செய்யப்பட்ட வைப்பு தொகையுடன் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் வசிக்கும் அனைத்து நபர்களுக்கும் இந்த வைப்பு சான்றிதழ் வழங்கப் படும் என்றும்; சான்றிதழ், 7 நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. வங்கிகள், இந்த வைப்பு சான்றிதழுக்கு எதிராக கடன்களை வழங்கக்கூடாது என்றும், ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட, குறிப்பிட்ட சான்றிதழுக்கு எதிராக மட்டுமே கடன் வழங்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, முதிர்வு காலத்துக்கு முன்னரே, வைப்பு சான்றிதழை திரும்ப வாங்குவதற்கு வங்கிகள் அனுமதிக்கப்படுகின்றன என்றும், ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|