சர்வதேச நிதிகளில்  முதலீடு செய்வது ஏற்றதா? சர்வதேச நிதிகளில் முதலீடு செய்வது ஏற்றதா? ... ஆயிரம்e சந்தேகங்கள்: கடனை கட்டியதற்கு  சான்றிதழ் வாங்கணுமா? ஆயிரம்e சந்தேகங்கள்: கடனை கட்டியதற்கு சான்றிதழ் வாங்கணுமா? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பி.பி.எப்., திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் பலன்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2021
20:18

பொது வருங்கால வைப்பு நிதியான பி.பி.எப்., திட்டம், பொதுவாக வரி சேமிப்பிற்கான முதலீடாக நாடப்பட்டாலும், இந்த திட்டம் பல்வேறு முக்கிய பலன்களையும் கொண்டிருக்கிறது. நீண்ட கால முதலீட்டு தன்மையோடு, நெருக்கடி காலத்தில் கடன் பெறும் வசதி மற்றும் முதிர்வுக்கு பின் நீட்டித்துக்கொள்வது உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. இந்த அம்சங்கள், பி.பி.எப்., முதலீட்டை மிகச்சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாக அமைக்கின்றன. பி.பி.எப்., அளிக்கும் கூடுதலான பலன்களை அறிந்து கொள்வது, உங்கள் நிதி திட்டமிடலில் உதவியாக அமையும்.


இடர் இல்லை:



அரசு ஆதரவு பெற்ற சிறுசேமிப்பு திட்டம் என்பதால், இதில் முதலீடு செய்யும் தொகை 100 சதவீதம் பாதுகாப்பானது. இந்த திட்டம், எந்த பங்குச்சந்தை நடவடிக்கையுடனும் தொடர்புடையது அல்ல. வங்கி திவாலானாலும் இந்த தொகை பாதுகாப்பானது. மேலும், வங்கி வைப்பு நிதி காப்பீட்டிற்கான தொகையில் இது சேராது.


அதிக பலன்:


இந்த முதலீடு பாதுகாப்பானது என்பதோடு, அதிக வட்டிப்பலன் அளிக்கக்கூடிய முதலீடுகளில் ஒன்றாக அமைகிறது. தற்போது இதன் வட்டி விகித பலன் 7.1 ஆக இருக்கிறது. இது, இடர் குறைந்த தன்மையோடு, இந்த அளவு வட்டிப்பலன் அளிக்கும் திட்டம் என்பதும் முக்கிய அம்சமாகும்.


எளிய முதலீடு:


இந்த திட்டத்தில் முதலீடு செய்வது சிக்கல் இல்லாதது. ஆண்டுக்கு 500 முதல், ஒன்றரை லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். எஸ்.ஐ.பி., முதலீடு போல, மாதந்தோறும் ஒரு தொகையை பிரித்து முதலீடு செய்யலாம். வட்டி வருமானமும் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பதால், கூட்டு வட்டியின் பலனை பெறலாம்.


கடன் வசதி:


நெருக்கடி காலத்தில், பி.பி.எப்., கணக்கில் இருந்து குறுகிய கால கடன் பெறலாம். இதற்கான வட்டி விகிதம் என பார்த்தால் 1 சதவீதம் தான். கணக்கு துவக்கிய பிறகு, மூன்றாம் ஆண்டு முதல், ஆறாம் ஆண்டு வரை இந்த வசதி பொருந்தும். அதன் பிறகு, பகுதி விலக்கல் சாத்தியம்.


நீண்ட காலம்:


பி.பி.எப்., திட்டம் 15 ஆண்டு காலம் கொண்டது. எனினும், முதிர்வுக்கு பின் அதற்கான விண்ணப்பம் சமர்ப்பித்து கணக்கை நீட்டித்துக் கொள்ளலாம். ஐந்தாண்டுகளாக நீட்டித்துக் கொள்ளலாம். ஆரம்ப காலத்திலேயே துவங்கினால், இந்த திட்டத்தை நீட்டிப்பதன் மூலம் ஓய்வு காலத்திற்கு சிறப்பாக திட்டமிடலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)