பதிவு செய்த நாள்
08 ஜூன்2021
21:26
புதுடில்லி:மும்பை பங்கு சந்தையின், பதிவு பெற்ற வர்த்தக உறுப்பினர்கள் அல்லது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 7 கோடியை தாண்டியுள்ளது.
இது குறித்து மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளதாவது:சந்தையின் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை தற்போது, 7 கோடியை தாண்டியுள்ளது. வாடிக்கையாளர் எண்ணிக்கை, 6 கோடியிலிருந்து, 7 கோடியாக ஆவதற்கு, வெறும் 139 நாட்களே ஆகியுள்ளது.இதுவே, 6 கோடி, 5 கோடி, 4 கோடி என்ற எண்ணிக்கையை எட்ட முறையே, 241, 652, 939 நாட்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்த, 7 கோடி பேர்களில், 38 சதவீதம் பேர், 30 – 40 வயது பிரிவினர் ஆகும். 20 – 30 வயது கொண்டவர்கள் எண்ணிக்கை, 24 சதவீதமாகும். 13 சதவீதம் பேர், 40 – 50 வயது பிரிவினர் ஆகும்.வாடிக்கையாளர் எண்ணிக்கை வெகு விரைவாக அதிகரிக்க, தொழில்நுட்ப ஆர்வமிக்க, 20 – 40 வயதுக்குட்பட்டோரே முக்கிய காரணம். தற்போது அதிகரித்துள்ள ஒரு கோடியில், 82 லட்சம் பேர் இப்பிரிவினரே.
மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களிலிருந்து அதிகம் பேர் பதிவு செய்துள்ளனர். மொத்த வாடிக்கையாளர்களில் இவர்களின் பங்கு முறையே, 21.5 மற்றும் 12.3 சதவீதமாகும். தமிழ்நாட்டின் பங்கு, 6.1 சதவீதம் ஆகும்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், கொரோனா தாக்கத்தால் சந்தை சரிந்தது. ஆனால், அதன் பிறகு மீட்சி காண துவங்கியதும், புதிய சில்லரை முதலீட்டாளர்கள் சந்தையின்பால் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு மும்பை பங்குச் சந்தை தெரிவித்து உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|