பதிவு செய்த நாள்
09 ஜூன்2021
20:53
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பங்கு சார்ந்த ‘மியூச்சுவல் பண்டு’ திட்டங்களில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கடந்த மூன்று மாதங்களாக அதிக முதலீட்டை ஈர்க்கும் பண்டாக, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு உள்ளது.இப்பிரிவில், கடந்த மார்ச் மாதத்தில், 9,115 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது. ஏப்ரலில், 3,437 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டிருந்தது.
இதற்கு முன், ஈக்குவிட்டி பண்டுகளிலிருந்து தொடர்ந்து முதலீடுகள் வெளியே எடுக்கப் பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020 ஜூலையிலிருந்து, 2021 பிப்ரவரி வரையிலான எட்டு மாதங்களில், முதலீடுகள் அதிகளவு வெளியே எடுக்கப்பட்டது.
மற்றொரு பக்கம், முதலீட்டாளர்கள், கடந்த ஏப்ரலில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல், கடன் சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்திருந்த நிலையில், மே மாதத்தில், 44 ஆயிரத்து, 512 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர்.
ஒட்டுமொத்த மியூச்சுவல் பண்டு துறையில், அனைத்து பிரிவுகளிலிருந்தும், மே மாதத்தில் கிட்டத்தட்ட, 38 ஆயிரத்து, 602 கோடி ரூபாய் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இதுவே கடந்த ஏப்ரலில், 92 ஆயிரத்து, 906 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது.
தங்க இ.டி.எப்., திட்டங்களில், கடந்த ஏப்ரலில், 680 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், மே மாதத்தில், 288 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.மியூச்சுவல் பண்டு துறையில், சொத்து மேலாண்மை நிறுவனங்கள் நிர்வகிக்கும் பண்டுகளின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், 33 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|